Thursday 13 November 2014

கணவனுக்கு பிறகு இன்னும் ஒருவருடன் வித்யாபாலன் விபரீத ஆசை..!

By on 10:08

பாலிவுட் நடிகை வித்யா பாலன் சமீபத்தில் வட இந்திய பத்திரிகை ஒன்றிற்காக பேட்டியளித்தார். அதில் தனது சினிமா, குடும்ப வாழ்க்கை குறித்த கருத்துக்களை பேட்டியாளரிடம் பகிர்ந்து கொண்டார்.சமீபத்தில் அவருக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. பேட்டியின் சில பகுதியில் இருந்து… காதலின் எதிரி திருமணம் என்று சொல்வதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? இல்லை! இப்போதும் நானும் எனது கணவரும் உல்லாசப் பயணங்கள் போய்க்கொண்டேதான் இருக்கிறோம். திருமணத்துக்கு முன்பு நாங்கள் அதிக நேரத்தை ஒன்றாகக் கழித்தோம் என்பது உண்மைதான். ஆனால் இப்போதும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஒன்றாயிருக்கப் பார்க்கிறோம்.

ஆனால் ஒன்றாயிருக்க கொஞ்சம் அரிதாக நேரம் கிடைப்பதே ஏக்கத்தை ஏற்படுத்துகிறது. வெற்றிகரமான ஆண்களை பெண்கள் ஈர்ப்பார்கள். உங்கள் கணவர் சித்தார்த் ராய் விஷயத்தில் அது போன்ற பயம் ஏதாவது உங்களுக்கு இருக்கிறதா? இல்லை! நான் ஏன் பயப்படவேண்டும். அவர் அவரது வேலையில் பிசியாக இருக்கிறார். அதனால் பயத்துக்கு வேலையே இல்லை. எங்கள் பணியில் நாங்கள் கொண்டிருக்கும் பற்று, இருவருக்கும் பரஸ்பரம் புரியும். நாங்கள் சினிமா உலகின் மற்ற விஷயங்கள் பற்றி பேசுவதில்லை. ஆனால் ஒரு படம் அல்லது கதை எப்படி இருக்கிறது என்று விவாதிப்போம். அழகான பெண் ஒருவர் மீது உங்கள் கணவரின் கவனம் சென்றால்…? அப்படி அவரது கவனம் திரும்பாது என்று நான் நம்புகிறேன். அப்படி அவர் செய்தால் நிச்சயம் அந்தப் பெண் மீது பொறாமைப்படுவேன். ஆனால் உறுதியாக அவர் அப்படிச் செய்ய மாட்டார்.

ஒரு கட்டழகன் மீது நீங்கள் மயங்குவதை உங்கள் கணவர் கண்டால்? வெள்ளித்திரையில்தான் அப்படி நடக்கும் என்று அவருக்குத் தெரியும். நிஜ வாழ்க்கையில் நான் ஒரே ஆணை விரும்பும் பெண். மற்றவர்களுடன் கலந்து பழகுவது எனக்குப் பிடிக்கும். மற்றவர்களுடன் கலகலவென்று பேசுவதை விரும்புவேன். ஆனால் அது எனது இயல்பு என்று அவருக்குத் தெரியும். அவரும் மற்றவர்களுடன் பழகுவதை விரும்புபவர். ஆனால் அதன் எல்லைகள் எங்கள் இருவருக்கும் தெரியும். இருவருக்கும் இடையிலான ஊடலுக்குப் பின் முதலில் இறங்கிவருபவர் யார்? அது மாறிமாறி வரும். எப்போதும் ஒருவரே இறங்கிவருவதில்லை. விட்டுக் கொடுத்தல் இல்லாவிட்டால் வாழ்க்கையில்  விரக்தியும், வெறுப்பும்தான் தோன்றும்.

திரையில் ஒரு நடிகை அல்லது நடிகருடன் முத்தமிட்டு நடிக்க வேண்டும் என்றால் உங்கள் தேர்வு? இன்னொரு நடிகையுடன் முத்தமிட்டு நடிக்க மாட்டேன்! நான் ஓரினப் பிரியை அல்ல. ஆனால் அப்படி நடித்தே ஆக வேண்டும் என்று நீங்கள் சொன்னால், என்னுடைய தேர்வு சல்மா ஹயக். அவர் என்னைவிட கொஞ்சம் மூத்தவர். ஆனால் பயங்கர கவர்ச்சியானவர்! ஆண் ஒருவருடன் முத்தமிட்டு நடிப்பது என்றால் எனது விருப்பம், ஆலிவுட் நடிகர் ஜார்ஜ் குளூனி. அவர் திருமணம் செய்வதை நான் விரும்பவில்லை. காரணம் என்னை திருமணம் செய்ய விரும்புவதாகக் கூறியவர் அவர். இப்போது எனக்கு திருமணமாகிவிட்டது என்றாலும், ஜார்ஜ் பிரம்மச்சாரியாக இருப்பதையே விரும்புகிறேன். முத்தமிட்டு நடிப்பதற்கு எனது இன்னொரு சாய்ஸ், நடிகர் சீன் பென்.

0 comments:

Post a Comment