Saturday 15 November 2014

செக்ஸ் சூப்பர இருக்க உதவும் உணவுகள்..!

By on 19:03
பெண்களுக்கு பல பொறுப்புகள் உள்ளன. குடும்ப பராமரிப்பு, மகப்பேறு, குழந்தைகளை வளர்த்தல் முதலியன. ஆனால் ஆண்களுக்கு உள்ள பெரும் பொறுப்பு பாலியல் உறவில் மனைவியை மகிழ்விப்பது! அதில் சிறிய குறைபாடு இருந்தால் கூட ஆண்கள் மனமுடைந்து போகின்றனர். எனவே தான் ஆதி காலத்திலிருந்து பாலுணர்வை தூண்டி உடலுறவை மேம்படுத்தும் உணவு, மருந்துகளை ஆண்கள் அதிகமாக நாடுகின்றனர். தங்கபஸ்பம், சிட்டுக்குருவி லேஹியம் முதலியன ஆணுக்கான “ரகசிய” மருந்துகளாக இருந்தன.

கஜுராஹோவையும், காம சூத்திரத்தையும் உலகுக்கு அளித்த நம் தேசத்தில் 30 கோடி ஜனங்கள் பாலியல் குறைபாடுகளுடன் வாழ்கின்றனர். புராதன இந்திய சமையல் குறிப்புகளில், காதலை தூண்டும் உணவுக் கலவையாக கருமிளகு, தேன், மிளகாய் முதலியன கூறப்படுகின்றன.

உணவுகள் காதல் செயல்பாடுகளை தூண்டுமா என்ற கேள்விக்கு விஞ்ஞானத்தில் பதில் ‘ஆமாம்’! அந்தந்த ஊருக்கு ஏற்றபடி காதல் உணவுகள் மாறுகின்றன. ஒட்டகத்தின் திமில் அரேபியர்களுக்கும் குங்குமப்பூ ஸ்பெயின் நாட்டவர்களுக்கும், கோகோ அஸ்டெக் இனத்தவருக்கும், பறவைக்கூடு சூப் சீனர்களுக்கும் முறையே ஆண்மைக்குறைவுக்கு மருத்துவ உணவாக கருதப்படுகின்றன.

சில பிரசித்தி பெற்ற உணவுகள்
ஆயுர்வேதத்தின் படி கோதுமை அரிசி, உளுத்தம் பருப்பு இவை ஆண்மையை ஊக்குவிக்கும், விந்துவின் தரத்தை உயர்த்தும்.

சோம்பு சமையலிலும் பயன்படுகிறது. மையலிலும் பயனாகிறது! இதன் விதைகளை உறிஞ்சி உண்டால் ஆசை அதிகமாகும்.

அஸ்பாரகஸ் சுவைவயுள்ள தோட்டக் கீரை.

பாதாம் பருப்பு – தொன்று தொட்டு ஆண்மையையும், மக்களைப் பெற சக்தி அளிக்கும் உணவாக கருதப்படுகிறது.

வாழைப்பழம் – வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியமும் ‘பி’ விட்டமின்களும் செக்ஸ் ஹார்மோனை தயாரிக்கத் தேவை. எனவே வாழைப்பழம் ஒரு ஆண்மையை பெருக்கும் முக்கியமான பழம்.

துளசி – உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பது துளசி. ஆண்களின் உடலுறவு ஆர்வத்தை தூண்டுகிறது.

சாக்லேட் – சாக்லேட்டில் தியோப்ரோமைன் இந்தப் பொருள் வேட்கையை பெருக்கும். தவிர சாக்லேட் ஒரு ஆன்டி – ஆக்சிடான்ட்.

காய்கறிகள் – பூமிக்கு அடியில் விளையும் கிழங்குகள், பூமியின் சக்தியை உறிஞ்சி, அதை நமக்களிக்கும். கேரட், முள்ளங்கி போன்றவை ஆண்மையை பெருக்கவல்லவை. தக்காளியும் சிறந்த பாலுணர்வு ஊக்கி. ஃப்ரான்ஸில் இதை ‘காதல் ஆப்பிள்’ என்பார்கள். வெங்காயமும் தொன்றுதொற்று இந்தியாவில், எகிப்தில், அரேபியாவில் ஆண்மை ஊக்கியாக பயன்படுத்தப்பட்டு வரும் காய்கறியாகும். அதுவும் வெள்ளை வெங்காயம் சிறந்தது. வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி உண்ண வேண்டும். “ஆனியன் சூப்” புத்துணர்ச்சி ஊட்டும். இவை தவிர குடமிளகாய், இஞ்சி, செலரி, வெள்ளரி, தனியா இவைகளும் உதவும். பிரசித்தி பெற்ற ‘அரேபிய இரவுகள்’ கதையில் ஒரு வியாபாரி 40 வருடங்களாக குழந்தையில்லாமல் இருந்து கொத்தமல்லி இலைகள் அடங்கிய மருந்தை உண்டு குழந்தை பெற்றுக் கொண்டதாக வருகிறது.

பழங்கள் – பப்பாளி, வாழைப்பழம், மாம்பழம், கொய்யாபழம் இவைகளும் சிறந்த இளமை காக்கும் பழங்கள். கொய்யாப்பழம் பெண்களின் ஜனனேந்திரிய உறுப்புக்களின் தசைகளை வலுப்படுத்தும். வாழைப்பழத்தில் உள்ள ஒரு வேதிப்பொருள் செக்ஸ் உணர்வை அதிகரிக்கும்.

பால் சார்ந்த உணவுகள் – பால் அதுவும் எருமைப்பால், தயிர்(பகலில்) மோர், வெண்ணை, நெய் இவை இல்லாமல் இந்திய உணவுகள் இல்லை. இவையெல்லாம் உடலுறவுக்கு வலிமை ஊட்டும் உணவுகள்.
மாமிசங்கள், மீன் – மாமிச வகைகளில் நீர் வாழ் பிராணிகளின் மாமிசம் உண்பது நல்லது. கடல் மீன்களை விட நதிமீன்கள் பாலியல் உணர்வை தூண்டுபவை. கடல் முத்துசிப்பி, சிறந்த ஆண்மை பெருக்கியாக கருதப்படுகிறது.

வெற்றிலை – உணவுக்கு பின் தாம்பூலம் தரிப்பது உடலுறவு ஆசையை தூண்டும். ஆனால் பாக்கு, புகையிலை, ஆல்கஹால் இவை எதிர்மாறான விளைவுகளை உண்டாக்கும்.
தேன் – எகிப்தியர்கள் காலத்திலிருந்தே பல பழங்கால மருந்துகள் தேன் அடங்கியவை. மீட் என்ற பானம் தேனிலிருந்து தயாரிக்கப்பட்டது. இது காதல் உணவை அதிகப்படுத்தும் மருந்தாக கருதப்படுகிறது.
வாசனை திரவியங்கள் – ஜாதிக்காய், ஏலக்காய், குங்குமப்பூ, இலவங்கப் பட்டை இவைகளும் ஆசையை அதிகரிக்கும் குறிப்பாக ஜாதிக்காய் “விந்து முந்துதலை” தடுக்கும். இந்த வாசனை திரவியங்களை பாலுடன் சேர்த்து உட்கொள்ள வேண்டும். ஞாபக மிருக்கட்டும் – இலவங்கப்பட்டை தான் ஆசைய ஊக்குவிக்கும். அதன் இலைகள், எதிர்மாறாக ஆண்மை ஆசையை குறைத்து விடும்.

தற்கால உணவு நிபுணர்களின் கருத்து

ஆண்மை வீரியத்தை அதிகரிக்க துத்தநாகம் இன்றியமையாதது. சர்க்கரை, மைதா மாவு, பாலிஷ் செய்யப்பட்ட பச்சரிசிகளில் துத்தநாகம் குறைவு. இந்த தாதுப்பொருளின் குறைவு பெண்களின் மாதவிடாய் சுழற்சியையும் பாதிக்கும். முழுத்தானியங்களில் துத்தநாகம் இருந்தாலும் அவற்றில் உள்ள பைடாடஸ் என்ற பொருள், உடல் துத்தநாகத்தை உட்கிரகிப்பதை தடை செய்யும். துத்தநாகம் உள்ள இதர பொருட்கள் – சிவப்பு மாமிசம், முத்துச்சிப்பிகள், பரங்கி விதைகள், அங்கக மாமிசங்கள், முட்டைகள்.

எல்லா பழங்களிலும் காய்கறிகளில் இருக்கும் பொட்டாசியம் ஆண்மை வீரியத்தை அதிகரிக்கும்.
செலினியம் உள்ள வெண்ணெய், மீன்கள், முழுக்கோதுமை, எள் முதலியவைகளும் காதல் உணவுகள்
மங்கனீஸ் அடங்கிய கொட்டைகள், விதைகள், முழுத்தானியங்கள் முதலியவைகளும் பாலியல் ஆற்றலுக்கு உதவும்.
பாஸ்பரஸ் (பரங்கிக்காய், முழுத்தானியங்கள், சூர்யகாந்தி விதைகள்) தாதுப்பொருளும் ‘தாது விருத்திக்கு’ உதவும்.


ஆண்மை வீரியத்திற்கு தேவையான விட்டமின்கள்
விட்டமின்கள்
விட்டமின் ‘இ’
விட்டமின் ‘சி’
விட்டமின் ‘ஏ’
விட்டமின் ‘பி’ காம்ப்ளெக்ஸ்
ஃபோலிக் அமிலம்
விட்டமின் பி 6
விட்டமின் பி 12

இருக்கும் உணவுகள்
முழுத்தானியங்கள், முட்டை, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, பாதாம், கீரைகள்
எல்லா காய்கறிகளும், பழங்களும் குறிப்பாக சிட்ரஸ் பழங்கள், தக்காளி, நெல்லி முதலியன
லிவர், முட்டைகள், சர்க்கரைவள்ளிக்கிழங்கு, கேரட், மீன் எண்ணெய்
முழுத்தானியங்கள், லிவர்
அஸ்பாரகஸ், இதர கீரைகள், முளைகட்டிய உணவுகள், முழுக்கோதுமை, சீஸ், பருப்புகள்
முழுக்கோதுமை, தவிடு, பால், வாழைப்பழம், வேர்க்கடலை, உலர் திராட்சை, லிவர், கிட்னி, மாமிசங்கள், மீன், இறைச்சி
பால், பால் சார்ந்த உணவுகள், முட்டை, லிவர்


பாலியல் இச்சையை குறைக்கும் உணவுகள்

ஒரு சராசரி மனிதனுக்கு தேவையான புரதம், கார்போஹைடிரேட், கொழுப்பு, விட்டமின்கள், தாதுப்பொருட்கள் செறிந்த உணவுகளை தேவையான கலோரிகளில் எடுத்துக் கொள்ளாவிட்டால், உடல் ஆரோக்கியத்துடன் பாலியல் திறனும் சிதைந்து விடும். சர்க்கரை, மதுபானங்கள், காப்பியில் உள்ள காஃபின் முதலியவை, ஊட்டச்சத்து உணவை, உடல் உட்கிரகிக்க விடாது. இதனால் ஆரோக்கியம் குன்றினால் ஆண்மையும் குறையும். எனவே அதீத காதல் உணர்வுகளால் கஷ்டப்படுபவர்கள் இனிப்பு, சோயா நிறைந்த உணவுகளால் இச்சையை ஒரளவாவது கட்டுப்படுத்திக் கொள்ளலாம். பாலியல் ஆசையை கட்டுப்படுத்த உதவும் உணவுகளில் ஒன்று சோயாவிலிருந்து தயாரிக்கப்படும் “டோஃபு”. சோயா பால் மற்றும் டோஃபூ, உடல் துத்தநாகத்தை கிரகிப்பதை தடுக்கிறது. வெள்ளரிக்காய், டர்னிப், முட்டைக்கோஸ் போன்றவைகளும் செக்ஸ் ஆசையை குறைக்கிறது. இந்த உணவுகள் தைராய்டு செயல்பாடுகளை குறைக்கும். தைராய்டு தான் பாலியல் உணவுகளை கன்ட்ரோல் செய்கிறது.

வளைந்த ஆணுறுப்பால் இன்பம் பெறலாமா..?

By on 17:11
இந்த கட்டுரையை பொது இடங்களில் படிப்ப‍தைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம். ஏனென்றால், இந்த கட்டுரை சம்பந்தமான ஒளிப்படங்களை அதாவது ஆணுறுப்பு படங்கள் தவிர்க்க‍முடியாத காரணத்தினாலும், அவசியம் தேவை என்பதாலும் இங்கு பகிரப்பட்டுள்ள‍து.

எல்லா ஆண்களிலும் ஆணுறு ப்பு விறைப்படையும்போது போ து நேராக இருப்பதில்லை.சில பேருக்கு நாப்பத்தைந்து டிக்கி ரி வரை கூட வளைவு இருக்க லாம்.


அதிகமாக வளைவு சில நோய் களின் போதும் ஏற்படலாம். ஆனாலும் இந்த நோய்களுக்கு தீர்வுகள் உள்ளன.இதனால் உங் கள் இல்லறமே


பாதிக்கப்படும் என்று அச்சம் கொ ள்ள வேண்டி யதில்லை.

இனி ஆணுறுப்பிலே வளைவை ஏற்படுத்தக் கூடிய சில நோய்க ளைப் பார்ப்போம்!

ஹைப்போ ஸ்பாடியாசிஸ் (Hypospadiasis)

சாதாரணமாக சிறுநீர் மற்றும் விந்து வெளியேறும் துளையான்து ஆணுறுப்பின் நுனியில்தான் இரு க்கும் .ஆனால் இந்த நோயினால் பாதிக்கப் பட்ட ஆண்களுக்கு அத்து ளையானது நுனிப்பகுதியில் அல் லாமல் அடிப்புறமாக ஆணுறுப்பின் தண்டுப் பகுதியில் இருக்கும். இத னால் ஆணுறுப்பு வளைந்துள்ளது போன்ற தோற்றம் ஏற்படலாம்.

இதற்கு சத்திர சிகிச்சை மூலம் வே று ஒரு துளையை ஆணுறுப்பின் நுனியில் ஏற்படுத்துவதன் மூல ம் தீர்வு காணப்படலாம்.

பைமொசிஸ் (phimosis)

பொதுவாக ஆணுறுப்பு விறைப் படையும் போது அதன் முன் தோல் பின்நோக்கி இழுபடும். ஆனால் சில பேரிலே இந்த முன்தோல் பின் நோக்கி இழுபட முடியாமல் இருக் கும். இதனால் ஆணுறுப்பிலே சில வேளைகளில் வளைவு ஏற்படலாம் .

இதற்கு சிறிய சத்திர சிகிச்சை மூல ம் தீர்வு காணப்படலாம். இந்த சத்தி ர சிகிச்சை circumcision எனப்படு ம் , இது முஸ்லிம் மக்கள் செய்து கொள்ளும் சுன்னத்து எனப்படும் செயன் முறையாகும்.

சிறுநீர் வழிச் சுருக்கம்.(urethral stricture)

சிறுநீர் வெளியேறும் குழாய் போன்ற அமைப்பு ஆணுறுப்பின் உள்ளே இருக்கிறது. அது urethra எனப்படும். இது சுருங்கு வதால் ureththral strict ure) ஏற்படுகிறது. இதனா ல் கூட ஆணுறுப்பு வளை ந்துள்ளது போன்ற மாயை ஏற்படலாம்.

பயரோநியஸ் நோய் (Peyronie’s disease )

இந்த நோயினால் பாதி க்கப்பட்ட ஆணுறுப்பி லே தோலுக்குக் உள் ளாக இருக்கும் பகுதி சற்று தடிப்பு (கடினம டைவதால்) அந்த ஆ ணுறுப்பு விறைப்படை யும் போது இவ்வாறு தடிப்படைந்த பகுதி யை நோக்கி வளைந் து காணப்படும்.

சில வேளைகளில் அ வர்களுக்கு வலி கூட ஏற்படலாம்.

சில ஆண்களிலே உடலுறவிலேயும் பாதிப்பை ஏற்படுத்தலாம்..

முக்கியமாக இதனால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு மனதளவி லே பெரிய அழுத்தங்கள் ஏற்பட லாம்.அதுவே அவர்களின் இல் ல றத்தைப் பாதிக்கலாம்.

இந்த நோயின் அறிகுறிகள்

இது படிப்படியாக ஏற்படலாம் அல்லது சிலரிலே சடுதியாகக் கூட ஏற்படலாம்.

முக்கிய அறிகுறி ஆணுறுப்பு விறைப்படையும் போது ஒரு பக்க மாக வளைந்திருத்தல்.அநேகமானவர்களில் இந்த வளைவு மேல் நோக்கியதாகவே இருக்கு ம். ஆனாலும் சிலபேரில் கீழ் நோ க்கியதாக அல்லது பக்கவாட்டில் இருக்கலாம்.

அடுத்த முக்கியமான அறிகுறி ஆணுறுப்பிலே வலி ஏற்படுதல்.

சில பேரிலே விறைப்புத்தன்மை ஏற்படுவதையே இது தடுக்கலாம்.

சிலவேளைகளில் ஆணுறுப்பு சிறிதாவது போன்ற தோற்றம் ஏற் படலாம்.

இது என்ன காரணத்தால் ஏற்படுகி றது?

சரியான காரணம் அறியப்படா விட் டாலும் , இது ஆணுறுப்பிலே ஏற்படு ம் காயங்கள் காரணமாக ஏற்படும் தழும்புகள் காரணமாகவே ஏற்படுவ தாக சொல்லப் படுகிறது.

புகைப் பிடிப்பவர்களுக்கும் , நீரழிவு நோயாளிகளுக்கும் இந்த நோய் ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகம் என்று சொல்லப் படுகிறது.

இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எப்போது வைத்தியரை நாட வேண்டும்?

இந்த நோய் இருக்கும் எல்லா ஆண்களி லும் இது வலியை ஏற்படுத்துவதில்லை. அ தே போல வளைவு இருந்தாலும் இது எல் லோரிலும் உடலுறவுக்கு இடையூறாக இ ருப்பதும் இல்லை.

ஆகவே ஆணுறுப்பிலே ஏற்படும் வளைவு காரணமாக உங்களுக்கு வலி ஏற்பட்டா லோ அல்லது அது உடலுறவுக்கு இடையூ றாக இருந்தால் மட்டுமே நீங்கள் வைத்தி யம் பெற்றுக் கொள்ள வேண்டியவர்யாகுறீர்கள்.

இதற்கு எவ்வாறான வைத்தியங்க ள் செய்யப்படலாம்?

மாத்திரைகள் மூலம் இதற்கு சரி யான தீர்வு கிடைப்பதற்கான சந்த ர்ப்பம் மிகக் குறைவு.

சிறிய அறுவைசிகிச்சைமூலம் தடி ப்படைந்த பகுதி அகற்றப்படலாம்.

வளைந்த‌ ஆணுறுப்பு அது எந்த அளவுக்கு வளைந்து இருக்கிறது என்பதைப் பொறுத்தே அமையும் .சிலவேளை அது சாதாரண வ ளைவாகக் கூட இருக்கலாம்.

இருந்தாலும் கூறியுள்ள விடய ங்கள் மூலம் அந்த நோய்களுக் கான சந்தர்ப்பம் உங்களுக்கு உள்ளது என்று நினைத்தாலோ அல்லது இது உங்களுக்கு பாலி யல் மற்றும் உளவியல் ரீதியாக பிரச்சினைகளைக் கொடுக்கிறதா என்பதைப் பொறுத்து நீங்கள் வைத்திய வசதியைப் பெற்றுக் கொள்ளுவது உகந்தது.

ஆனாலும் இதனால் உடலுற விலே ஈடுபடும் தகுதி இல்லை என்று தேவை இல்லாமல் மன தைக் குழப்பிக்கொள்ள வேண் டாம்.

ஆண் பெண் மலட்டுத் தன்மை – தீர்வு இதோ..!

By on 16:17
இன்றைய கால கட்டத்தில் பெண்கள் சந்தித்துவரும் பெரும் பிரச்சனையாக மாறி வருகிறது மலட்டுத் தன்மை. சீரான முறையில் பாதுகாப்பான உடலுறவில் ஈடுபட்டாலும் கூட ஒரு

பெண் கர்ப்பம் தரிக்க முடியாமல் போனால் அது தான் மலட்டுத் தன்மை. அதே போ ல் கர்ப்பமான பெண் அந்த சிசுவை சுமக்க முடியாமல் அடிக்கடி கருச்சிதைவு ஏற் பட்டால் அதையும் மலட்டுத் தன்மை என்று தான் கூறுவோம்.

சீரான முறையில் பாதுகாப்பான உடலுறவில் தொடர் ந்து ஒரு வருடம் ஈடுபட்டும் கூட கரு தரிக்கவில்லை என் றால் தான் மலட்டுத் தன்மை இருப்பதாக கருதப் படுகிறது. மலட்டுத் தன்மைக்கு பல கா ரணங்கள் வழி வகிக்கிறது.

உங்கள் வயது, உணவு, வாழ்க்கை முறை, மன அழுத்தம், மருத்துவ நிலைப்பாடு அல்லது தொழில் ரீதி யான வெளிப்படுத்தல்கள் போன்ற வைகள் இதற்கு காரணமாக விளங் கலாம். இது உங்களின் ஒட்டுமொ த்த உடல்நலத்தை பாதிப்பதோடு மட்டுமல்லாமல் மலட்டுத் தன்மை யையும் உண்டாக்கி விடுகிறது.
பெண்களுக்கு இந்த பிரச்சனை ஏற்பட காரணமாக விளங்குவது மரபு சார்ந்த பிரச்ச னைகள், சீரில்லாத கருமுட்டை வெளிப்படுதல், ஹார்மோன் சமமின்மை, உடல் பருமன் போன்றவைகள். பெண்களுக்கு ஏற்படும் மலட்டுத் தன்மையை தடுக்க உணவு முக்கிய பங்கு வகிக்கிறது.

துரித உணவு மற்றும் ஜங்க் உணவு வகைகளை கண்டி ப்பாக தவிர்த்திட வேண்டு ம். இவ்வகை உணவுகளில் தீவனச் சேர்க்கைப் பொருட் கள் மற்றும் பதப்பொருட்க ளும் சேர்க்கப்பட்டிருக்கும். இது உங்கள் கருத்தரிப்புத் திறனை வெகுவாக பாதிக் கும். மலட்டுத்தன்மையை தடுக்க காய்கறிகள் மற்றும் பழங்களை உங்கள் உண வில் சேர்த்துக் கொள்ளுங்கள்.


கருத்தரிப்புத் திறனை பாதிக்கு ம் மருத்துவ நிலைகளை பற்றி தெரிந்து கொள்ள வல்லுனர்க ளிடம் இருந்து மருத்துவ ஆ லோசனை பெற்று கொள்வது ஒரு சிறந்த வழியாகும். மலட் டுத்தன்மை ஏற்படும் அறிகுறிக ளை நீங்கள் உணர்ந்தால் உங்கள் மருத்துவரிடம் ஆலோச னை பெறுங்கள்.

ஆரம்பகட்டத்திலேயே பிரச் சனைகளை கண்டறிந்தால் மலட்டுத்தன்மையை தவிர் க்கலாம். பெண்களுக்கு மலட்டுத் தன்மை ஏற்படுவ தற்கு முக்கிய காரணங்க ளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது உடல் பருமன். உடல் பருமன் ஹார்மோன் சமமின்மையை உண்டாக்கும். அதனால் மலட்டுத் தன்மை ஏற்படும்.


பாலி சிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் போன்ற பல பிரச்சனைகளை சரிசெய் ய உங்கள் உடல்எடையை குறைக்க வேண்டும். பெ ண்களுக்கு உண்டாகும் மலட்டுத் தன்மையை தடுக்க சரியான உடல் எடையுடன் இருப்பதும் அவசியமான தாகும்.

பெண்களுக்கு ஏற்படும் மலட்டுத் தன்மையை தடுக்க ஆரோக்கியமான வாழ்க்கை முறை யை கடைப்பிடித்திட வேண்டும். உ ங்கள் வாழ்க்கை முறையே உங்கள் வாழ்க்கையை பற்றிய அனைத்தை யும் கூறிவிடும். ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை பின்பற்றி பெ ண்களுக்கு ஏற்படும் மலட்டுத் தன் மையை தடுத்திடுங்கள்.

கேள்வி பதில் - அந்தரங்கம்

By on 13:24
என் வயது42; சிறுவயதிலேயே தாய், தந்தையை இழந்ததால், சொந்த அத் தை எடுத்து வளர்த்தாள். 13 வயதில் பெரியவளாகி, அத்தை கணவரிடம் படாதபாடுபட்டேன். சிறுமி என்று கூட பார்க்காமல், தன் காம இச்சையை அடிக்கடி தீர்த்துக் கொண் டார் மாமா. இது அத்தைக்கு தெரியவர, உடனே

திருமணம் செய்து வைத்து விட்டார்.

கணவர் வெளிநாட்டில் இருந்தார்; ரொம்ப வசதியானவர். திருமண ம் ஆகும் போது அவருக்கு வயது, 24. எங்களுக்கு ஒரு பையன், இரண் டு பெண் என, மூன்று குழந்தைகள் பிறந்தனர். தற்போது, இரண்டு பெண்ணுக்கும் வசதியான இடத்தில் திருமணம் செய்துகொடுத்து விட்டோம்.

பையனுக்கு போன வருடம் திருமணம் ஆனது. பையன்தான் மூத்தவன்; 28வயது ஆகிறது. வங்கி ஒன்றில் வேலை செய்கி றான். மருமகளும், அதே வங்கியில்தான் வேலை பார்க்கிறாள். ஒரே ஜாதி தான்; பெற்றோர் பார்த்து முடித்து வைத்த திரு மணம். என் கணவர் இன்னும் வெளிநாட்டில் தான் வேலை செய்கி றார். எனக்குதுணை, பையனும், மரு மகளும் தான்.

என் மருமகளின் அண்ணனுக்கு வய து 32. இன்னும் திருமணம் ஆகவில் லை; பெண் பார்த்து வருகின்றனர். அடிக்கடி, தங்கையை பார்க்க எங்கள் வீட்டிற்கு வருவார். அவனிடம் ஏதேச்சையாக பழகிய பழக் கம், என்னிடம் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. பையனும், மரும களும் வேலைக்கு சென்றிருக்கும் சமயங்களில் நாங்கள் தனி மையில் பேசிக் கொண்டிருப்போம்.

இது நாளடைவில், எங்களுக்கு ஒரு வித கிளர்ச்சியை ஏற்படுத்த, ஒரு நாள் உடலளவில் இணை ந்து விட்டோம். இப்போது, அவ ரை விட்டு பிரிய எனக்கு விரு ப்பம் இல்லை. வாரத்தில், இர ண்டு நாட்களாவது நாங்கள் இ ணைந்தே ஆகவேண்டும் என்ற நிலையில், இருவருமே இருக் கிறோம். அவரும், இப்போது தி ருமணம் வேண்டாம் என, வீட்டில் சொல்லி வருகிறார். எனக்கு மிக வும் சங்கடமாக உள்ளது. என்ன செய் வதென்றே தெரிய வில்லை.

மகனுக்கும், மருமகளுக்கும் இந்த வி ஷயம் தெரிந்தால் காறித் துப்பிவிடு வர். ஒளிவு மறைவுடன் எத்தனை நாள் தான் தவறு செய்ய முடியும்ஸ ஒரு நாள் மாட்டிவிடுவோம்என எடுத்து சொல்லி யும், அந்தபையன் கேட்பதில்லை. நான் இந்த நிலைமையில் என்ன செய்வது அம்மாஸ இதிலிருந்து நான் விடுபட முடியாமல் தவிக் கிறேன். நீங்கள்தான் எனக்கு நல்ல ஒரு யோசனை சொல்ல வேண்டும். உங்களின் யோசனை க்காக காத்திருக்கிறேன்.

மகளுக்கு,

சிறுவயதிலேயே காமத் தீயால் சூடு பட்டவளான நீ, நல்லவளாக இருந் திருந்தால், உனக்கு நேர்ந்த அநீதி யும், வலியும், வேதனையும் சாகும் வரை மறந்திருக்காது. உனக்கு கி டைத்த வாழ்க்கையை தங்கமாக மதித்திருப்பாய்; உன் கணவனுக்கு மனதாலும் துரோகம் செய்ய நினைத்திருக்க மாட்டாய்.

மகளேஸமனிதர்கள் யாராய் இருந்தா லும், தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளிலிருந்தும், தாங்கள் செய் யும் தவறுகளிலிருந்தும் வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக் கொள்ள தெரிந் திருக்க வேண்டும். அப்போது தான் அமைதியான, நிறைவான, சந்தோஷ மான வாழ்க்கையை அனுபவிக்க முடியும்.

உலகம் அறியாத, எதிர்க்க துணிவில்லாத அந்த சிறுவயதில் தான், இன்னதென்று தெரியாமல் சாக்கடையில் உழன்றாய்; அதற்கு பின்பும் உனக்கு ஒரு அமைதியான, கவுரவமான வாழ்க்கை அமை ந்திருக்கிறது என்றால், நீ உன் கணவனுக்கு ம், கடவுளுக்கும் எத்தனை விசுவாசமாய் இ ருந்திருக்க வேண்டும்?


வளர்ந்த மூன்று குழந்தைகளுக்கு தாய் நீ. அதை மறந்து, இந்த வயதிலும் நம்மை விட சிறுபையன் நம் மேல் மையல் கொண்டு மயங்கிக் கிடக்கி றானே என்ற மிதப்பில், சிறு குற்ற உணர்ச்சி கூட இல்லாமல், வாரத்தி ல் இரண்டு நாளாவது உறவுவேண் டும் என் கிறாய். உன்னை நம்பி, தன் உற்றார், உறவினர், நண்பர், சந்தோ ஷம் அத்த னையும் துறந்து, கடல் கடந்து பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் உனக்காக உழைத்துக் கொ ட்ட சென்றிருக்கிறானேஸ உன் கண வன், அவனுக்கு நீ செய்யும் நன்றிக் கடன் இதுதானா?

உனக்குள் அடக்க முடியாத அளவுக்கு காமம் பீறிட்டு எழுகிறது என் றால், உன்நிலையை உன் கணவ னுக்கு விளக்கி, ஒன்று நீ அவனு டன் அவன் இருப்பிடத்திற்கு சென் றிருக்க வேண்டும்; இல்லை, உன் கணவனை வேலையைவிட்டுவா, இருப்பதைவைத்து வாழ்வோம் என்று வரவழைத்திருக்க வேண்டு ம். அதைவிட்டு, மருமகளின் அண் ணன் வந்தான், தனிமையில் பேசினோம், கிளர்ச்சியாக இருந்தது, தப்பு செய்தோம். அவனை விட்டு பிரிய முடியவில்லை என, உன் தவறு க்கு நொண்டிச் சாக்கு கூறுகிறாய். தவறுக ளை நீ தெரியாமல் செய்பவள் அல்ல; அதன்விளைவுகளை தெரிந்தேசெய்யு ம் குணம் கொண்டவள்.

எத்தனை வயதானால் என்னஸபெண் என்பவள், வெறும் காமத்திற்கு உரிய இச்சைப் பண்டம் என்பதை, உன்னைப் போன்ற பெண்கள்தான், ஆண்களுக்கு நிரூபித்துக் கொண்டே இரு க்கிறீர்கள்.

மகளே! காமம் என்பது சுடர்விட்டு எரியும் நெருப்பு; அதில் எணணெயை ஊற்றிக் கொ ண்டே, அணைக்க நினைத்தால் மேலும் மே லும் பற்றி எரியத்தான் செய்யுமே தவிர, ஒரு நாளும் குளிர்ந்துபோகாது. அதனால், முதலி ல் மனதை அடக்கு; முறையற்ற காமம், உன்னையும் அழித்து, உன்னைச்சார்ந்தோரை யும் நிம்மதி இழக்க வைக்கும்.

‘வேட்கை வெறியின் விளைவாய் ஏற்படுவது சினமும், மனக்குழப்பமும்தான். மனக்குழப்ப த்தால் நினைவை இழப்பதும், அந்நினைவை இழப்பதனால் கடமை மறக்கடிக்கப்பட்டு, புத்தி நாசமடைந்து, மனிதனை அழிவுக்கு இட்டுச் செல்கிறது. இந்த வேட்கை வெறியானது, கடலலை மேல் காற்று ஒரு தோணியை அடித்துச் செல் வதைப் போல மனிதனின் அறிவையே அடித்துச் சென்று விடுகிறது’ என்கிறது பகவத் கீதை.

மூன்று சம்பந்தம் எடுத்த நீ, தனி மனுஷி அல்ல; மனம் போனபடி வாழ! உன் ஒவ் வொரு நல்ல, கெட்ட செயல்களின் பிரதி பலிப்பு உன் பிள்ளைகளின் வாழ்க்கை யிலும் எதிரொலிக்கும் என்பதை மறந்து விடாதே; உன் கள்ளஉறவால், கவுரவத்தைகெடுத்துக்கொள்ளாதே!


‘இன்பத்திலும், துன்பத்திலும் பிரியமாட்டேன்; எப் போதும் விசுவாசமாக இருப்பேன்ஸ’ என, அக்னி யை வணங்கித்தான் ஆணும், பெண்ணும் திருமண பந்தத்திற்குள் நுழைகின்றனர். அந்த சத்தியத்திற்கு விசுவாசமாக இருக்கப்பார். ஒருத்தரின் தாலியை சுமந்து கொண்டு, இன்னொருவனை உல்லாசிக்கா மல், உன் கள்ளக் காதலனுக்கு உன் வீட்டின் கத வை மட்டுமல்ல, உன் மனக் கதவையும் தாள் போ ட்டுவிடு. உன் உடல், மனநிலையை விளக்கி, வெளி நாட்டிலிருந்து உன் கணவனை வரவழைத்து, மிச்சக் காலத்தை மன அமைதியுடன், சந்தோஷமாக வாழ்!

பெண்களின் காம உணர்வை அதிகரிக்கும் முறைகள்..!

By on 13:07
உங்களுடைய காதல் முயற்சிகள், துணைவியாரை திருப்திப்படுத்தாமல் போவது என்பது சற்றே அசௌகரியமான விஷயமாகும். இந்த வகையில் உங்களுடைய துணைவியை திருப்திப்படுத்த மேலும் சில முயற்சிகளை செய்வது நல்லது. பெண்களின் லிபிடோ காரணிகளின் எண்ணிக்கைகளே அவர்களுடைய காம வேட்கையை அதிகரிக்க உதவுகின்றன. நீங்களோ அல்லது உங்களுடைய துணைவியாரோ செக்ஸ் வாழ்க்கையில் திருப்தியடையவில்லையெனில், பிரச்சனைகளுக்கு விதை விதைக்கிறீர்கள் என்று அர்த்தம்.

இப்பொழுதெல்லாம் நீதிமன்றங்களுக்கு வரும் விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கையைப் பார்த்தால் உங்களுக்கு தலை சுற்றி விடும். நீங்க ‘அதுல’ ஸ்ட்ராங்கா இருக்கணுமா? அப்படின்னா இந்த உணவுகளை சாப்பிடுங்க… தாம்பத்ய வாழ்க்கையில் திருப்தி ஏற்படவில்லை என்பதும் இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது. மேலும், பெண்களிடம் லிபிடோ என்ற காம உணர்வு குறைவதன் காரணமாக, அவளுடைய ஆண் துணையாக இருப்பவருக்கும் தாம்பத்ய வாழ்க்கையில் திருப்தி கிடைப்பதில்லை. இதனால் அவர்களுக்கிடையிலான உறவுகள் பாதிக்கப்படுவதால், நிலைத்தன்மை நீடிப்பதில்லை. எனவே, உங்களிடையேயான உறவு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், உங்கள் துணைவியாரின் வேட்கையை அதிகப்படுத்துவது நல்ல வழிமுறையாகும்.

மார்கெட்டுகள் மற்றும் சமையலறைகளில் காணப்படும் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாக இது உள்ளது. இந்த கீரை வகையில் காணப்படும் ஆன்ட்ரோஸ்டெரோன் என்ற தாது, தாம்பத்ய உறவை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் தூண்டக் கூடியதாகும். மணமற்ற ஹார்மோனாகிய இது பாலுணர்வுக்கான தூண்டுதலை மிகவும் திறனும் செய்யும்
பெண்களுக்கு மிகவும் அவசியமான தாதுக்களில் ஒன்றாக போலிக் அமிலம் உள்ளது.

 உடல் மற்றும் வலிமையைப் பொறுத்த அளவில் ஆண்களை விட பலவீனமானவர்களாக பெண்கள் இருப்பதால், அவர்ளுடைய உடலை பலமாகவும் மற்றும் திறனுடனும் வைத்திருக்க போலிக் அமிலம் உதவுகிறது. இந்த உணவில் பொட்டாசியமும், வைட்டமின் பி6 சத்தும் நிறைந்துள்ளன
பெண்களின் காம உணர்வைத் தூண்டக்கூடிய மற்றுமொரு இயற்கை உணவாக சிப்பி உணவு உள்ளது. இதிலுள்ள துத்தநாக தாதுப்பொருள், பெண்களின் காம உணர்வைத் தூண்டும் ஹார்மோன்களுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆண்களுடைய விந்தணுக்களின் எண்ணிக்கையும் கூட சிப்பி உணவைச் சாப்பிடுவதால் அதிகரிக்கும்.

அனைத்து வகையான மனிதர்களுக்கு ஏற்ற சத்தான உணவாக முட்டை உள்ளது. முட்டையில் B5 மற்றும் B6 ஆகிய வைட்டமின்கள் உள்ளதால், ஹார்மோன்களின் சமநிலையை எளிதில் அடைய முடிகிறது. இதன் காரணமாக பெண்களுடைய காம உணர்வும் அதிகரிக்கிறது

1. மகிழ்ச்சி அதிகரிக்கிறது. 2. சுய-மதிப்பு கூடுகிறது 3. துணையுடனான மண வாழ்க்கையின் முன்னேற்றம் 4. உங்களுடைய துணையின் மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த முடியும் 5. வீடு மற்றும் பணி வாழ்க்கையினிடையே சமநிலையை ஏற்படுத்த முடியும்.

நமக்குப் பிடிச்ச பெண்ணைத்தூக்கிப் பார்த்து ரசிப்பது எப்படி தெரியுமா…?

By on 12:46
50 கேஜி தாஜ்மஹால் எனக்கே . எனக்கா… இந்த ஜீன்ஸ் பாட்டை க் கேட்டுட்டு நிறைய ஆண்கள் ஹெவி வெயிட் சாம்பியனாக மாறிப் போனா ர்கள். ஆசை ஆசையாக மனைவியை யும், காதலியையும் (ஒரே சமயத்தில் அல்ல, தனித்தனியாகத்தான்) தூக்கிப் பார்த்து சந்தோஷப்பட் டார்கள். உண் மையிலேயே நமக்குப் பிடிச்ச பெண் ணைத்தூக்கிப் பார்த்து ரசிப்பது எவ்வ ளவு சந்தோஷமான விஷயம் தெரி யுமா…

சினிமாக்களில் மட்டும்தான் ஹீரோக்கள் ஹீரோயின்களை தூக்கி விளையாடனுமா, என்ன.. நிஜத்திலும் கணவர்களும், காதலர் களும்தான் ஹீரோக்கள்.. மனைவி யரும், காதலியரும்தான் ஹீரோயின் கள். எனவே இவர்களும் கூட இப்படித் தூக்கி தூக்கி விளையாட லாம். தப்பே இல்லை…
காதலிலும், காமத்திலும் அன்னியோ ன்யத்திற்கு நிறைய முக்கியத்துவம் உண்டு. உடல் ஸ்பரிசமும், உள்ளக் கிளர்ச்சியும் இங்கு கொழுந் து விட்டு எரியும்போது உடலும், உள்ளமும் ஒரு சேர சந்தோஷப்ப டும்.

செக்ஸ் உறவின்போதும், ஜாலியான மன நிலையில் இருக்கும் போதும் பெண்களை ஆண்கள் தூக்கு வது என்பது ரொம்ப வித்தி யாசமான தாக இருக்கும். மற்ற நேரத்தி்ல் மனை வி அல்லது காதலியைத் தூக்க சிரம ப்படும் ஆட்கள் கூட அந்த சமயத்தில் ஒரே தூக்காக தூக்கி விடுவார்கள். அப்போது அந்தப் பெண்கள் படும் சந் தோஷம் இருக்கே..

சொல்லி மாள முடியாது. தூக்குவதில் என்ன சந்தோஷம் இருக்கிறது என்பது தெரியவில்லை. இதுகுறித்து விஞ்ஞானப்பூர்வமாகவும் எதுவும் கூறப்பட்டதாக தெரியவில் லை. பெரும்பாலும் செக்ஸ் உறவு சமய த்தில்தான் இப்படி தூக்கி விளையாடுவதை அதி கம் செய்கிறார் கள் ஆண்கள். இப்படி செய் வதால் அந்தப் பெண்களுக்கு, தங்களது துணைவர்கள் மீது நிறைய மதிப்பும், ஆசையும் பெருகு கிறதாம். நம்மாளு நல்லா ஸ்டிராங்கா தன் இருக்காரு என்று அவர்களுக்கு பெருமையாகவும் இருக்கு மாம். இதனால்தான் தங்களைத் தூக்கும் கணவர் அல்லது காதல ரை பெண்கள் ரசிக்கிறார்களாம்.

இப்படித் தூக்கி விளையாடுவது ஆண்க ளின் உரிமை இல்லை, பெண் களும் கூட இதைச் செய்யலாம். சரி தூக்குவது என்று முடி வான பின்னர் அதை எப்படிச் செய்யலாம்… இதிலும் கலை நயத்தைப் புகுத்துங்களேன்.. உங்களால் எளி தில் தூக்க முடியும் என்று தோன்றினால் ஏதாவது சின்னதாக ஒரு ரொமான்ஸ் கவி தையை சொல்லியபடியே தூக்குங்குள். அப் படியே ரூமுக்குள் அல்லது வீட்டுக்குள் சின் னதாக ஒரு வலம் வாருங்கள். தூக்கிய நிலையி்ல் உதடுகளில் அழகாக ஒரு முத்தம் வையுங்கள், கண்களில் அழகாக முத்தமிடு ங்கள், காதுகளில் சின்னதாக கிஸ் பண் ணுங்கள். சங்குக் கழுத்தில் சிக்கென்று ஒன்று வைத்து சிலிர்ப் பூட்டுங்கள். கையில் தூக்கியிருக்கும்போது இடுப்பில் சின்ன தாக விளையாட்டுக் காட்டுங்கள்.

மீன் போல அவர் துள்ளிக் குதிக்கும் போது மார்போடு கட்டி அணைத்து தாலாட்டுங்கள். தூக்கிய நிலையிலேயே அப்படியே ஏதாவது ஒரு டேபிளில் மெல்ல படுக்க வைத்து நீங்கள் அவர் மீது சாய்ந்து அப்படியே உள் வாங்கிக் கொண்டு உற்சாகமூட்டுங்கள் – முத்த மழையால். பிறகு முக்கியமான விஷயம், முடிந்தவரை நல்ல திடமாக பாலன்ஸ் செய்து கொண்டு துணையை தூக்குவது நல்லது. இல்லாவிட்டால் கால் ஸ்லிப்பாகி ‘பார்ட்டி’யை கீழே போட்டு நீங்களும் விழுந்து ‘அப்பள்ம்’ போல நொறுங்கிப் போக நேரிடும்…!

தாம்பத்தியத்தில் வெற்றி அடைய வழிகள் இதோ..!

By on 12:38
தாம்பத்தியத்தில் வெற்றிக்கும், தொடர் வெற்றிக்கும் கணவன் – மனைவி இருவரின் உடல் நலமும், மன நலமும், முக்கியம். அதனால் அன்றாட உணவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப் பொருள்கள் நிறைந்த சைவ, அசைவ உணவுகளையும, காய்கறிகள், பழங்கள், கீரைகள், போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* எந்த சந்தர்ப்பத்திலும் பாலியல் சக்தியை அதிகரிக்கும் என்று சொல்லும் போலி மருந்துகளை சாப்பிடக்கூடாது. சாப்பிட்டதும் உடலுறவை வைத்துக்கொள்ள கூடாது. இதனால் முழுமையான இன்பம் கிடைக்காது. வயிற்றில் உணவு முழுமையாக இருந்தால் செயல்பாடுகளில் ஆர்வம் காட்ட முடியாது.

* உறவுக்கு முன் இனிமையான உரையாடலும் உணர்வு பரிமாறலும் முன் விளையாட்டுகளும் இருக்க வேண்டும். அப்போது தான் உறவில் முழுமை பெற முடியும்.

* தாம்பத்தியம் மென்மையாகவும், நிதானமாகவும் இருக்க வேண்டும், ஆவேசமும், அவசரமும் காட்டினால் தாம்பத்தியம் அரைகுறையாகவும் அலங்கோலமாகவும் ஆகிவிடும்.


* கோபம் சண்டையை தீர்க்கக்கூடிய சக்தி செக்ஸுக்கு உண்டு. ஆனால் மனஒற்றுமை, ஏற்படாமல் உடல்களால் மட்டுமே இயங்கி உடல் வேட்கையை தணிக்க முயற்சிப்பது நல்லதல்ல.


* வயது அதிகரித்ததும் குழந்தை வளர்ந்ததும் தாம்பத்திய உளவு கொள்வது பாவம் என்று நினைக்க தேவையில்லை, இன்பம் தரும் உடலுறவுக்கு வயது ஒரு தடை அல்ல.

* கணவன் – மனைவி அந்தரங்கமான இல்லற வாழ்வில் ஒருவர் விருப்பத்தை மற்றொருவர் புரிந்து கொள்ள வேண்டும். அத்துடன் அதை முடிந்த வரை நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும்.

* அடிக்கடி உடலுறவு வைத்துக்கொள்ள விரும்பும் பெண்களும் உண்டு. அவர்களது விருப்பத்தை ஆண்கள் உதாசீனப்படுத்தாமல் முடிந்த வரை நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும்.

* தாம்பத்திய உறவை அதிகரிக்கும் சக்தி, கீரை மற்றும் பழங்களுக்கும் உண்டு. மீன், புறா, வெள்ளாட்டுக்கறி, இறால் போன்றவை மிகவும் நல்லது. பேரீச்சம்பழம், பாதாம்பருப்பு, பசும்பால் போன்றவையும் ஆண் – பெண் உறவுக்கு வலிமையும், இனிமையும் சேர்க்க கூடியவை.

* இருவரும் தூக்கத்துக்கு போகும் முன் கலவி நேரத்தை தேர்வு செய்ய வேண்டியது மிகவும் அவசியம். அலுவலக வேலையை முடித்து விட்டு நள்ளிரவில் வந்து வீடடில் இருக்கும் மனைவியிடம் செக்ஸ் வைத்துக்கொள்ள கணவன் நினைத்தால் அவள் தயாராக இருக்க மாட்டாள். ஏனெனில் நீண்ட நேரம் கணவனுக்காக காத்திருந்து ஏமாந்து போயிருக்கும் அவளால் உடனடியாக கலவிக்கு தயாராக முடியாமல் போகும்.

* தாம்பத்தியத்தில் பெரும் குறையாக இருப்பது தம்பதிகளின் அவசர உடலுறவு ஆகும். யாருமற்ற நேரம், இடம் போன்றவற்றை தேர்வு செய்து தொந்தரவு இல்லாமல் உறவை அனுபவிக்கும் போது மட்டுமே இன்பத்தின் எல்லைவரை செல்ல முடியும். கூட்டு குடும்பத்தினருக்கு இது பெரும் குறையாக இருந்தால் இதற்கென சுற்றுலா செல்லும் வாய்ப்புகளை உருவாக்குதல், தாய் வீட்டுக்கு கணவனை அழைத்துச் செல்லுதல் போன்றவை அவசியமானதாகும்.

* தம்பதிகளுக்குள் முற்றிலும் தவிர்க்க வேண்டிய சொல் கூச்சம். எதற்காகவும் எப்போதும் கூச்சப்படாமல் உறவில் இறங்கும் போது தான் இருவரும் ஆசைப்பட்டதை கேட்கவும் கொடுக்கவும் முடியும்.

பாலுறவில் உச்சம்… சில நம்பிக்கையும் உண்மையும்..!

By on 09:28
உணர்வுகளின் உச்சக்கட்டம் ஒரே மாதிரியானது தான். அதாவது தொடுதல், முத்தமிடுதல், கட்டி அணைத்தல், தழுவுதல், புத்தக ங்கள் மூலமோ, அல்லது கற்ப னை மூலமோ இப்படிப் பலவா று உச்ச க்கட்டம் எட்டப்படுகிற து. இது போலப் பல வகைகளில் உச்சக் கட்டத்தை அடைந்தாலு ம் உடல் அதற்கு ஒரே விதமா கத் தான் அனிச்சையாகப் பலன் கொடுக்கிறது என்பது தான் உண் மை.
பாலுணர்வுத் தூண்டலின் போது நமது உடலுக்குள் ஏற்படும் மாற் றங்கள் பற்றிய அறிவு இருந்தால் தான் செக்ஸ் பற்றிய மாயைகள் விலகி அதை முழுமையாக அனுபவிக்க முடியும்.

கிளர்ச்சி அடைவது என்பது செக்ஸ் அடிப்படையில் அலசி ப் பார் த்தால் அது பால் உறுப்பு க்களையும், நரம்பு மண்டலத் தையும் பொறுத்த ஓர் எதிர் அலை. மூளை தான் இக்கிளர் ச்சி அத்தனைக்கும் மூல கார ணமாகச் செயல்பட்டுக் கொண் டிருக்கிறது.

ஆர்கஸம் எனப்படும் கிளர்ச்சி நிலைப்பற்றி பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. உறவில் சரியான உச்சக்கட்டத்தை அடைய முடி யாத பெண்கள் தங்களின் துணையைப் பற்றி தவறாக எண்ணக் கூடும் என்ற கருத்து நிலவுகிறது.

இது உண்மையில்லை. பெண்களுக்கு உச்சகட்ட இன்பத்தை அடை ய வைக்க பல்வேறு வழிமுறைகள் உள்ளன. உற வினால் மட்டு மல்ல காதலான பேச்சுக் களினாலும் கூட பெண்ணிற்கு கிளர்ச்சி யூட்ட முடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

கிளர்ச்சி நிலையினால் மட்டுமே பெண்களால் முழுமையான இன் பத்தை அனுபவிக்க முடியும். கிளர்ச்சி அடைதல் என்பது ஆணுக் கும் பெண்ணுக்கும் வேறுபடுகி றது என்பது நம்பிக்கை. ஆனா ல் அது உண்மையில்லை. உற வைப் பொருத்தவரை இருவரு க்குமே திருப்தி என்பது வேறு படுகிறது. பெண்ணிற்கு எளிதி ல் திருப்தி கிடைப்பதில்லை என்கின்றனர் ஆய்வாளர்கள்.

மூளையில் இருந்து கிளம்பும் மின் உணர்வுகளும், ரசாயன சமிக் ஞைகளும் தண்டுவடத்தின் மூலமும், நரம்பு நுனிகள் மூலமு ம் உடலெங்கும் பரவுகின்றன. மூளையில் இருந்து இப்படி ஒரு செயல் நடந்து கொண்டிருக்க, தோல், மற்றும் செக்ஸ் உறுப்புகள், மார்பகங்களிலிருந்து கிளம்பும் சமிக்ஞைகளும் மூளையைச் சென் றடைகின்றன. ஆனால் உடல் உணர்ச்சிகளே தேவையின்றி சில சமயம் பாலுணர்வுக் கிளர் ச்சி என்பது தனியே மூளை மட்டும் சம்பந்தப்பட்டதாகவு ம் இருக்கலாம். அதிலும் சில சமயங்களில் பாலு ணர்வை தூண்டும் உறுப்புக்களிலிருந்து தோன்றும் இனம் புரியாத உணர்வலைகள் மிக ஆழமாக உருவாகி அதனால் மூளை என் ன உணர்ந்தது என்றே உணர முடியாமலும் போகலாம். இந்த நிலை தான் தன்னை மறந்த நிலை எனப்படுகிறது.

பெண்களுக்கு தாம்பத்தியத்தில் ஆர்வம் குறைய காரணம்..?

By on 06:40

எந்தப் ஒரு திருமணம் ஆன பெண்ணுக்கும் தாம்பத்தியம் மீது ஆர்வம் இல்லாமல் போகவே போகாது. நிச்சயம் இருக்கத்தான் செய்யும், ஆனால் ஆண்களைப் போல வெளியில் காட்டிக் கொண்டிருக்க மாட்டார்கள். இதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றை பார்க்கலாம்..

• சில பெண்களுக்கு தாங்கள் அழகாக இல்லை, உடல் அழகு சரியில்லை என்ற விரக்தி இருக்கலாம். இவர்களுக்கும் கூட தாம்பத்தியத்தில் ஆர்வம் குறைவாக இருக்குமாம். ஆனால் இப்படிப்பட்ட பெண்கள் மீது அவர்களின் ஆண் துணைகள் அதீத அன்பையும் பொழிந்தால் நிச்சயம் இவர்களுக்கும் தாம்பத்திய ஆர்வம் சிறப்பாக தூண்டப்படுமாம்.

உன்னாலும் என்னை ஆள முடியும், நீயும் செக்ஸியாகத்தான் இருக்கிறாய் என்று அவர்களுக்கு தைரியம் சொல்லி ஊக்கப்படுத்தினாலே போதும் அவர்கள் நிச்சயம் தாம்பத்தியத்தில் சிறந்து விளங்குவார்கள் என்கிறார்கள் மருத்துவர்கள்.

• சில ஆண்கள் எப்போது பார்த்தாலும் தாம்பத்தியம் நினைப்பிலேயே இருப்பார்கள். தங்களது துணையை தொடர்ந்து கொண்டே இருப்பார்கள். இது பெண்களுக்கு அலுத்துப் போய் விடும். நான் என்ன தாம்பத்தியம் மெஷினா என்று விரக்திக்குப் போய் செக்ஸையே வெறுக்க ஆரம்பித்து விடுவார்கள்.

இப்படிப்பட்டவர்களிடம் மனித நேயத்துடன் பொறுப்புடன், பொறுமையாக நடந்து கொண்டு மனதைக் காயப்படுத்தாமல் மனதையும், காமத்தையும் வெல்ல முயற்சிக்க வேண்டும்.

• இது பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் பிரச்சினைதான். உறுப்பு வறட்சி, இறுக்கம் காரணமாக உறவின்போது வலி ஏற்படுவது சகஜம்தான். இதனாலும் பலருக்கு தாம்பத்தியம் பிடிக்காமல் போய் விடுகிறதாம். இதுபோன்ற நேரங்களில் உரிய உபாயங்களைக் கையாள வேண்டும்.

மேலும் முரட்டுத்தனமான உறவை தவிர்க்க வேண்டும். இப்படி பெண்கள் சந்திக்கும் தாம்பத்திய பிரச்சினைகள் நிறையவே உள்ளன. ஆனால் பிரச்சினை என்று வந்தால் கூடவே தீர்வும் இருக்கத்தானே செய்யும். அதை நாம் சரியாக உணர்ந்து, புரிந்து தெளிந்து அணுகினால் எல்லாம் சரியாகி, இன்பமும் கைகூடி வரும்.