Wednesday 24 December 2014

பெண்கள் உடலுறவுக்கு ஆசை படுவதற்கான காரணங்கள்..!

By on 17:40
ஒரு ஆண், உடலுறவை விரும்ப ஒன்று அல்லது இரண்டு காரணங்களே இருக்க முடியும். ஆனால் பெண்களைப் பொறுத்தவரை, கிட்டத்தட்ட 200 காரணங்கள் இருக்கிறதாம். அதில் காதல், காமம் ஆகியவற்றுக்குக் கிட்டத்தட்ட கடைசி இடம்தானாம்.

போரடிப்பதால் சில பெண்கள் உடலுறவுக்கு உட்படுகிறார்களாம், தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு செக்ஸ் உறவு நல்ல மருந்தாக இருக்கிறதாம். சே, பாவமா இருக்கு ‘இதைப்’ பார்த்தா என்று ஆண்கள் மீது பாவப்பட்டு, பச்சாதாபப்பட்டு உறவுக்கு ஒத்துழைப்பவர்களும் உண்டாம். ஒரே தலைவலி ஒரு ‘டீ’ சாப்டா தேவலாம் என்று நினைத்து உறவுக்கு வருபவர்களும் உண்டாம்.

ஆக, பெண்களைப் பொறுத்தவரை உடல் ரீதியான இன்பம், காதல், காமம், ஆசை என்பதைத் தாண்டி ஏகப்பட்ட காரணங்கள் இருக்கிறது அவர்கள் உடலுறவுக்கு வருவதற்கு என்கிறார்கள் இதுகுறித்து ஆராய்ந்தவர்கள்.
ஒரு பெண் உடலுறவை விரும்புதவற்கு கிட்டத்தட்ட 200 காரணங்களை அவர்கள் வகைப்படுத்துகிறார்கள். மன அமைதி விரும்புவோர், செய்த உதவிக்கு நன்றி கூற விரும்பி என்று இதில் வித்தியாசமான காரணங்கள் இடம் பெறுகின்றன. பல்வேறு பெண்களை நேரில் சந்தித்து அவர்களின் உடலுறவு அனுபவங்களை கண்டறிந்து அதன் மூலம் இந்தக் காரணங்களை வகைப்படுத்தியுள்ளனர்.

பெரும்பாலான பெண்களுக்கு, ஆண்களைப் பார்த்தவுடன் பிடிப்பதில்லையாம். வெளியில் எவ்வளவுதான் நட்பாக பேசினாலும் கூட மனசுக்குள் அந்தப் ‘பார்ட்டி’ யை தராசுத் தட்டில்தான் உட்கார வைத்திருப்பார்களாம். மேலும் ஆண்களைப் பார்த்தவுடன் மோகம் பிறப்பது என்பது பெண்களுக்கு அவ்வளவு எளிதில் வந்து விடுவதில்லையாம். அதாவது, மன ‘ஸ்கேனரில்’ விதம் விதமாக ஆராய்ந்து, அக்கு வேறாக பிரித்துப் பார்த்த பின்னர்தான் ஒரு ஆண்மீது பெண்ணுக்கு முழுமையான காதலும், காம உணர்வும் வருகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

ஒரு ஆணிடம் தனது உடலைத் தரும் முடிவுக்கு பெண் வரும்போது அந்த ஆணைப் பற்றிய அனைத்தையும் அவள் அறிந்து வைத்திருப்பாள் என்றாலும் கூட உடல் ரீதியான திருப்திக்காக மட்டுமே பெண்கள் ஆண்களை அணுகுவதில்லை என்பதும் இந்த ஆய்வின் ஒருபகுதி கருத்து.

உடலுறவில் ஈடுபடும் பெண்கள் சொன்ன சில காரணங்கள் – எனது செக்ஸ் திறமை சரியாக இருக்கிறதா என்பதை பரிசோதித்துக் கொள்ள அதில் ஈடுபடுகிறேன், உடலின் மினுமினுப்பு குறைந்து விட்டது அதை சரி செய்ய ஈடுபடுகிறேன், அவனிடம் சற்று கோபமாக பேசிவிட்டேன்சமாதானப்படுத்த ஈடுபடுட்டேன் என்ற ரீதியில் போகிறது. இன்னும் சிலர் சொன்ன காரணங்கள், அவன் எனக்குப் பிடித்த ஒரு விஷயத்தை செய்து கொடுத்தான், அதற்கு நன்றி கூற விரும்பினேன், அதற்காக உடலுறவுக்கு ஒத்துக் கொண்டேன் என்பது
இருப்பினும் கிட்டத்தட்ட 85 சதவீதம் பெண்கள், செக்ஸ் உறவு மன திருப்தியையும், மன அமைதியையும், உடல் ரீதியான உற்சாகத்தையும் தருவதாக ஒப்புக் கொண்டுள்ளனர். அதாவது, என்னதான் சப்பைக் காரணமாக இருந்தாலும் கடைசியில் அந்த உடலுறவு அவர்களுக்கு ஒரு வித திருப்தியைத் தருவதை ஒப்புக் கொள்கின்றனர்.

பெண்களின் மனதைப் புரிந்து கொள்வது கடினம் என்பார்கள். இந்த ஆய்வைப் பார்த்தால், எந்த விஷயத்திலும் பெண்களைப் புரிந்து கொள்வது ரொம்பக் கஷ்டம் போலத்தான் தெரிகிறது.

பொம்பங்களைப் புரிஞ்சுக்கிறது ரொம்பக் கஷ்டம்ய்யா … என்று ‘பாப்பையா’ ஸ்டைலில் சொல்லி மனசைத் தேத்திக்கிட வேண்டியதுதான்.

என் மெல்லிதழ் கடித்துப் போ..!

By on 14:00
சின்னச் செவ்விதழ்.. எத்தனை எத்தனை ஆராய்ச்சிகள்.. காதலிலும் சரி, காமத்திலும் சரி திளைக்கத் திளைக்க பேசப்படும் ஒரே விஷயம் முத்தம்தான்.. முத்தம் மொத்தம் எத்தனை என்று வகை வகையாக பிரித்து மேய்ந்து விட்டனர் முத்த ஆராய்ச்சியாளர்கள்.. ஆனாலும் முடிவே இல்லாமல், முடிவும் தெரியாமல்.. இன்னும் இன்னும் என்று போய்க் கொண்டேதான் இருக்கிறது முத்த ஆராய்ச்சிகள்.. சத்தம் போடாமல். கொடுப்பதும் சரி, வாங்குவதும் சரி..

முத்தத்திற்கு முற்றுப்புள்ளி என்பதே கிடையாது.. கொடுக்க கொடுக்க வாங்குவதிலும், வாங்க வாங்க கொடுப்பதிலும் கிறங்கிப் போய்க் கிடக்கின்றன உலகத்து உதடுகள்… வாங்களேன்.. முத்தத்திற்குள் ஒரு முறை ஒரு சிற்றுலா போய் வருவோம்… உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை… இது முத்தத்திற்கும் பொருந்தும். எத்தனை எத்தனை கொடுத்தாலும்… சலிக்காமல் இருப்பது இந்த முத்தம் மட்டுமே. என் மெல்லிதழ் கடித்துப் போ… மென்மையாக சுவைத்துப் போ… உள்ளுக்குள் போர் ஒன்றை தட்டி எழுப்பு.. என் உதடுகளுக்குள் பாயும் புலியாய் பறந்து வந்து பரபரப்பை ஏற்படுத்து… என்றுதான் முத்த மழை பொழியப் பெற்றோரின் உதடுகள் துடித்துக் கதறும். முத்தம் தருவதும் சரி, அதைப் பெறுவதும் சரி.. தனிக் கலைதான்.. மெல்ல இதழ் விரித்து.. மேலுதட்டில் கொஞ்சம்.. கீழுதட்டில் மிச்சம் என்று மெல்ல மெல்ல அலை பாய்ந்து.. ஆசையாக அந்தக் கள்ளூறும் உதடுகளில் களிப்பாக நடமிடும் நாவுகளுக்கும், உதடுகளுக்கும் கிடைக்கும் உற்சாகம்.. புத்தியை பித்தம் பிடிக்க வைக்கும்.. முகத்துக்கு முகம் பார்த்து நெருங்கி வந்து…

நீ கொஞ்சம் நான் கொஞ்சம் என்று போட்டி போட்டு நான்கு உதடுகளும் நர்த்தனமாடும்போது கிடைக்கும் உற்சாகம்.. எத்தனையோ சக்திகளுக்குச் சமமாம். முகத்தை நம் பக்கம் திருப்பி… மெல்ல தலை சாய்த்து… கண் மூடிக் கிறங்கிக் கிடக்கும் துணையை ஆசைப் பார்வை பார்த்து.. அவர் மயங்கிக் கிறங்கி வரப் போவது என்னவோ என்ற எதிர்பார்ப்பில் நெஞ்சம் படபடத்துக் கிடக்க… மென்மையாக நெருங்கி.. சின்னதாக ஒரு முத்தம் வைக்கும்போது சிலிர்க்கும் பாருங்கள்.. நெஞ்சம்.. சிம்லாவின் குளிர் தோற்கும் அந்த சிலிர்ப்புக்கு. முத்தத்தை எப்படி வேண்டுமானாலும் கொடுக்கலாம்.. வாஞ்சையாக, ஆசையாக, உணர்வோடு, உந்துதுதலோடு, காமத்தோடு, காதலோடு… எப்படிக் கொடுத்தாலும் கிறங்கிப் போக காத்துக் கிடக்கின்றன இதழ்கள்.. பிறகென்ன உற்சாக பானம் அருந்த யாருக்கும் தந்தி அடித்து பெர்மிஷன் கேட்க வேண்டியதேயில்லை.. உதடுகளோடு உறவாடி சின்னதாக பெப் டாக் நடத்தினாலே போதும்…

நெற்றியில் உன் முத்தத்தால் என்னை நனை.. என் இதயத்தின் தாளமெல்லாம் தட்டுத் தடுமாறும்… நீ என்னை நினை… கண்ணில் உன் இதழ் பதித்து… காதோரம் உன் இதழ் சிரித்து… கழுத்தோரம் விளையாடி… என் இதயத்தைக் களவாடி.. என் இதழோடு உறவாடி… என்னைக் கொன்று போட்டுப் போ… என்றுதான் தோன்றும் உறவுக்கு கட்டியங் கூறும் முத்தத்தைப் பெறுவோருக்கு. பால் நிலா கருத்த வானில் தடம் பதித்து தாளமிட… பருத்த இதழ் பறித்து.. கோவையை கிளி கொத்துவது போல செவ்விதழ்களைக் கவ்விப் பிடித்து… இதழில் கதை எழுதும் நேரம் இதுவன்றோ… இதழ்களை ரசியுங்கள்… இனிமையாக முத்தமிடுங்கள்.. இதுதான் சொர்க்கத்தின் உண்மையான ‘ரியாலிட்டி ஷோ’!