Friday 5 December 2014

காம சூத்திரம் கூறும் 5 வகை காதல் சமிக்ஞைகள்

By on 21:28
காதலர்கள் ஒருவருக்கொருவர் தரும் முத்தங்கள் நேரத்திற்கேற்ப, சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப அமையாலாம். அந்தந்த சந்தர்ப்ப சூழ்நிலைகளில் தரப்படுவதின் அடிப்படையிலேயே முத்தங்களின் பெயர்களும் அமைகின்றன. பொதுவாக, முத்தங்களும், தழுவல்களும் ஒரு ஆணும், பெண்ணும் கலந்து இன்பம் அனுபவிக்கும் பொருட்டுப் பயன்படுத்தப்படும் காதல் சமிக்ஞைகள் என்கிறது காமசூத்திரம். இவற்றை 5 வகைகளாகவும் அது பிரித்துக் கூறுகிறது. அவை…

இங்கு கூறப்படுபவை காதலன்-காதலி, கணவன்-மனைவி இருவருக்கும் பொருந்தும்.

உத்திபாக சும்பன் (காம இச்சையைத் தூண்டும் முத்தம்)

கலிதக சும்பன் (கவனத்தைத் திருப்பும் முத்தம்)

பிரீதிபோதகா சும்பன் (ஆசையை உணர்த்தும் முத்தம்)

சாயா சும்பன் (நிழலை முத்தமிடுதல்)

சங்கிரந்த் சும்பன் (மாற்றப்பட்ட முத்தம்)

உத்திபாக சும்பன் (காம இச்சையைத் தூண்டும் முத்தம்)

காதலன் அயர்ந்து படுத்துத் தூங்கிக் கொண்டிருக்க, காதலி மோகம் பொங்க ஏக்கப் பெருமூச்செறிந்து அவனது முகத்தையே நெடு நேரம் பார்த்துக் கொண்டிருந்து விட்டு கடைசியில் அவனது கன்னத்தில் மெல்ல முத்தமிட்டு அவனது காம இச்சையைத் தூண்டுவது இந்த முறையாகும்.

கலிதக சும்பன் (கவனத்தைத் திருப்பும் முத்தம்)


காதலன் காதலியைப் பார்க்காமல் வேறு ஏதவாது வேலைகளில் ஈடுபட்டிருக்க, காதலி அவனது கவனத்தைத் தன் பக்கம் திருப்பும் விதத்தில் அவனுக்கு முத்தம் அளிப்பது இந்த வகை.

பிரீதிபோதகா சும்பன் (ஆசையை உணர்த்தும் முத்தம்)

காதலி தூங்கிக் கொண்டிருக்கிறாள். பணி முடித்து வெகு நேரம் சென்று வீடு திரும்பிய காதலன், தனது ஆசையை அவளுக்கு உணர்த்தும் விதத்தில் அவளது கன்னத்தில் மெதுவாக முத்தம் பதிப்பது இந்த வகை.

சாயா சும்பன் (நிழலை முத்தமிடுதல்)

காதலன் தன் காதலை வெளிப்படுத்த, முகக் கண்ணாடி அல்லது நீர் நிலையில் தெரியும் காதலின் முகத்தில் முத்தமிடுவது இந்த வகை

சங்கிரந்த் சும்பன் (மாற்றப்பட்ட முத்தம்)

காதலி, தனது காதலனிடம் காதலை வெளிப்படுத்த அருகில் இருக்கும் குழந்தை, ஓவியம், அல்லது சிலைகளுக்கு முத்தமிடுவது இந்த வகை

‘இரண்டு உதடுகளையும் ஒருசேரக்குவித்து, பெண்ணின் உடலில் உனக்கு விருப்பமான இடத்தில் வைத்து மிருதுவாக அழுத்து. அப் போது ஒரு வினோதமான சத்தம் கேட்கும். அதுதான் முத்தம். எங்கே முத்தம் இடுகிறோமோ அந்த இடத் தைப் பொறுத்து முத்தமிடும் முறைகளும், அந்த முத்தங்களால் ஏற்படும் பரவச உணர்வுகளும் வித்தியாசப்படும்’ என்று அடிப் படை வகுப்பெடுக்கிறார் வாத்ஸாயனர்.

ஒரு ஆண், பெண்ணை எங்கெங்கே முத்தமிடலாம் என்று சுட்டிக் காட்டுகிறார். பெண்ணின் உணர்சிப் பிரதேசங்களாக எட்டு இடங்களைச் சொல்கிறார். பெண்ணின் உச்சிப் பொட்டு, நெற்றி, கண்கள், கன்னங் கள், உதடு, நாக்கு, மார்பகங்கள், இரண்டு மார்பகங்களுக் கிடையே உள்ள மையப்பகுதி அகிய எட்டு இடங் கள் தான் அவை.

இவை தவிர இன்னும் மூன்று இடங் களை ரகசியமாகத் தருகிறார். இந்த இடங்களை ‘கலாஸ்தானம்’ என்று குறிப்பிடுகிறார். பொதுவாக இப்ப டித்தான் முத்தமிட்டுக் கொள்கிறார்கள். இங்கெல்லாம் முத்த மிடும் போது பரவச உணர்வு எழும். ஆனால் அதில் எது தப்பு எது சரி என்று சொல்ல மாட்டேன். ஒவ்வொருவரும் அவர் வாழும் நாடு, காலம் சூழ் நிலை, ஆகியவற்றைப் பொறுத்து அவரவருக்கு எது சரி என்று தெரிகிறதோ அப்படி முத்த மிட்டுக் கொள்ளுங்கள்’ என்று தீர்க்கமாக சொல்கிறா ர்.


ஒவ்வொரு முத்தத்துக்கும் அழகாய் பெயர் சூட்டியுள்ளார். தூரத்தில் வரும் காதலனை பார்த்தவுடன் காதலி தூங்குவது போல நடிக்கிறாள். ஆசையோடு வரும் அவனது எண்ணம் என்னவாக இருக்கும் என்று அறிந்து கொள்ளும் ஆவல் அவளி டம். வரும் காதலன் இவள் நினைத்த மாதிரி நினைத்த இடத்தில் முத்தம் கொடுக்கி றான். இது ‘பிராதி போதக சும்பணம்’ நினைத்த மாதிரி முத்தம் என்கிறார்.

இரவு வேளை, ஊரில் திருவிழா, ஊரே கூடி தின்று திருவிழாவை ரசிக்கின்றது. வெளிச்சமான இடத்தில் உறவுக்காரர்கள் சூழ்ந்தி ருக்க ஒரு பக்கம் காதலி, அவளுக்கு சற்று தொலைவில் கண்களில் காதலோடு காத்திருக்கும் காதலன். எல்லோரும் திருவிழா காட்சி களில் லயித்திருக்கும் போது காதலன் அ வளை நெருங்கி குனிந்து கை விர ல்களையோ, கால் விரல்க ளையோ பிடித்து முத்தமிடுகிறான். இது ‘அங் குலி சும்பணம்’, அதாவது விரல் முத்தம்.

காதலர்கள் எப்படியோ திருமண பந்தத்தில் இணைந்து விட்டார் கள். ஆனால் அந்த ஆண் மீது பெண்ணுக் கு முழு நம்பிக்கை வரவில்லை. ஆனால் அவன் உறவுக்கு கட்டாயப்படுத்துகிறான். அவளிடம் முத் தம் கேட்டு தன் உதட்டைக் குவித்து நிற்கிறான். அப் பெண் தன் முகத்தை அவன் முகத்துக்கு அருகில் கொண்டு போய் எந்த உண ர்சியும் இல்லாமல் சும்மா உதட்டால் உதடு தொடுகிறா ள். இது ‘நிமிதகம்’ அதாவது சும்மா முத்தம்.

காதலனும் காதலியும் சந்திக்கவோ அன்பை வெளிப்படு த்திக் கொள்ளவோ முடியவி ல்லை. காதலி எங்கோ இரவி ல் பாதுகாப்போடு வரும்போ து சுவரில் விழும் அவளது நிழலுக்கு முத்தம் இடுகிறான், காதலன். இது ‘சாயா சும்பணம்’ நிழல் முத்தம். இப்படி முத்தத்தைப் பற்றி அதிகமாக ஆராய்ந்து அலசிய நூல் காம சூத்திரம் மட்டுமே. இந்தி யர்கள் காலப்போக்கில் முத்தத்தின் நண்மைகளை உணராமல் ஒது க்கி வைத்து விட்டார்கள்.

உச்சக்கட்டத்தில் பெண்கள் என்ன பண்ணுவாங்க தெரியுமோ ..?

By on 00:12
ணத் தம்பதிகளுக்குத் தேனிலவு தரும் பரிசு…!
திருமணமான புதிதில், சில பெண்களுக்கு பயிற்று வலி ஏற்பட்டு, சிறுநீர் கழிக்கும் போது கடுமையான எரிச்சல் தோன்றுவதுண்டு இந்த அறிகுறிகள் இவ்வாறு புதுமணப் பெண்களுக்கு தோன்றுவதற்குக் காரணம், அவர்களின் சிறுநீர் வெளியாகும் உறுப்புக்களில் கிருமித் தொற்று ஏற்படுவதே ஆகும். ஆடவன், தன் இளம் மனைவியோடு உடலுறவு கொள்ளும்போது, தன்னையும் அறியாமலே அவன் வழியாக, அவன் ஆண் குறி வாயிலாக, அவள் சிறுநீர் கழிக்கும் உறுப்புக்களில் கிருமிகள் புகக் காரணம் ஆகிவிடுகின்றhன். பெண்ணின் பெண் குறிக்குக் கொஞ்சம் மேலேதான், அவள் தன் சிறுநீரை வெளியாக்கும் முத்திரக் குழாய் என்னும் யூரீத்தாவின் துவாரம் அமைந்துள்ளது என்பதனை நாம் இங்கு நினைவு கூரவேண்டும்.

இவ்வாறு திருமணமான புதிதில் பெண்டிருக்கு ஏற்படும் இந்தக் கிருமித் தொற்றினை தேனிலவு சிறுநீர்க் கிருமித் தொற்று என்று நயமாக மருத்துவர்கள் கூறுவர். ஆங்கிலத்தில் இதனை ஹனிமூன் பைலோ நெஃப்ரைட்டிஸ் என்பர் திருமணமான உடனேயே புதுமணத் தம்பதிகள் தேனிலவு செல்வர் தேனிலவு செல்லும் காலத்தில்தானே இத்தகு கிருமித் தொற்று ஏற்படுகின்றது? ஆகவே இந்தப் பெயர் எத்தனைப் பொருத்தமாக அமைந்துள்ளன?

உச்சக்கட்டத்தில் பெண்கள் என்ன உணர்கிறார்கள்…?

செக்ஸ் உறவின் போது ஏற்படும் உச்சக்கட்ட இன்பத்தைப் பல்வேறு பெண்கள் அவரவர்களுக்குத் தோன்றிய விதத்தை கூறுவது ஆச்சரியான விஷயம். அந்த நேரத்தில் அந்தரங்கத்தில் தொங்குவது போல உணர்கிறேன் என்று சில பெண்களும், தீவிரமான ஒரு பரவச நிலையை அடைவதாகச் சிலரும், இந்தப் பரவச நிலை மன்மதபீடத்தில் தொடங்கி உடல் முழுவதும் பரவுகிறதாக ஒரு சிலரும், பால் உறுப்புக்களில் ஒரு வித வெப்பம் தோன்றி மறைவதாக ஒரு சிலரும், மின்னல் உடல் முழுவதும் தோன்றி வியாபிக்கிற கட்டம் அது… எனவும் பெண்கள் உச்சக்கட்டத்தை வேறு வேறாகக் கூறுகின்றனர்.

ஆனால் ஆண்களைப் போல பெண்கள் உச்சக்கட்டம் அடைந்ததும் விந்தைப் பீய்ச்சுவதில்லை. மாறாக அவர்களது குறியில் மதன நீர் என்னும் ஒரு வகை பசை போன்ற நீர் சுரக்கிறது. இதைத்தான் சில பெண்கள் தமக்கும் விந்து சுரக்கிறது எனத் தவறாக எண்ணிக் கொள்கின்றனர்.

பெண்களைப் போலன்றி, ஆண்களின் உச்சக்கட்டம் இரண்டு பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதியில் விந்தணுக்களைக் கொண்டு செல்லும் குழாய்கள்- புரோஸ்டேட் விந்துக்குழாய்கள் ஆகியவற்றில் தொடர்ச்சியான இறுக்கங்கள் தோன்றி விந்து சிறுநீர்க்குழாயில் செலுத்தப்படுகிறது. அப்போது தான் ஆண் இனி விந்து வெளியேறி விடும் என்ற தீவிரத்தை அனுபவிக்கிறான். இனியும் தன்னால் விந்து வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த முடியாது என உணர்கிறான்.

உச்சக்கட்டம் எதைப்பொறுத்தது…?

இன்ப எழுச்சி நிலையில் உணர்வுகளைத் தூண்டுதல்கள் மேலும் மேலும் தீவிரமகும் போது இதுவரையில் சேர்த்து வைத்துக் கொண்டிருந்த பாலுணர்வு இறுக்கத்தை உடல் இனியும் வைத்துக்கொள்ள இயலாமல் திடீரென்று உத்வேகத்துடன் வெளியே தள்ளுகிறது. இந்த நிலையையே உச்ச நிலை என்கிறோம். ஆங்கிலத்தில் இதனை க்ளைமாக்ஸ் அல்லது கமிங் என்கின்றனர். இந்த நிலை நீடிக்காது. மிக மிகக் குறுகிய நிலை.

இந்த நிலையில் சில நொடிகளில் தாளகதியில் தசைச்சுருக்கங்கள் தோன்றி மிகத் தீவிரமான உணர்வலைகள் உணரப்படுகின்றன. உடனே நெகிழ் நிலை ஏற்படுகிறது. உடற்கூறு அடிப்படையில் உச்சக்கட்டம் என்பது பேரின்பம் அல்லது மெய்மறந்த நிலை அல்லது ஆனந்த அனுபவம் என்று பல வகையாகக் கூறப்படுகிறது.

உச்சக்கட்டம் ஆணுக்கு-ஆண் ஒரே ஆணுக்கு, உறவுக்கு உறவு மாறுபடும். சில சமயம் உணர்வலைகள் ஒருங்கே கூடி ஒரு பெரிய வெடிப்புடன் உச்சக்கட்டம் நேரலாம். சில உச்சக்கட்டங்கள் மிக மிக மென்மையாக உணரப்படலாம். உச்சக்கட்டம் என்பது தீவிரம் அல்லது தீவிரமின்மை என்பது உறவு கொள்ளும் நபர், நேரம், எதிர்பார்ப்பு, சூழ்நிலை, மனநிலை, ஆகியவற்றைப் பொறுத்துத்தான் அமையும். எனவே இதில் இத்தனை மாறுபாடுகள் உள்ளன.

உச்சக்கட்டத்தில் ஆண் என்ன உணர்கிறான்…?

விதைகள் முற்றிலும் மேலே ஏறி குறியின் அடிப்பகுதியை நெருங்குவது போல இருந்தால் உச்சக்கட்டம் வெகு சீக்கிரத்தில் வந்து விடும் என்று அர்த்தம். ஆனால் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் இவ்வாறு விதை மேலே எழும்புவது குறைவு. இதற்குக் காரணம் விந்து வெளியேறும் நிலையின் இறுக்கம் குறைந்து வருகிறது என்று பொருள்.

உச்சக்கட்டம் நெருங்கும் நேரம் சிலருக்கு விந்து நீர் பனித்துளி போல குறியின் முனைப்பகுதியில் வந்து நிற்கும். இந்தத் திரவத்திலும் ஏராளமான விந்தணுக்கள் இருக்கலாம். இந்த நிலையில் ரத்த அழுத்தம் காரணமாக புரோஸ்டேட் சுரப்பியிலும் சில ஆண்கள் நன்றhக வெப்பத்தையும், ஒரு வித இறுக்கத்தையும் உணர்கின்றனர்.

இதே போல புட்டம் மற்றும் தொடைப்பகுதியிலும் இது போன்று உணர்வார்கள். சில சமயம் இதயத்துடிப்பு அதிகமாக உணரப்படும். அப்போது மூச்சு விடுதலில் ஒரு விதக் கடின நிலை உண்டாகி உச்சக்கட்டம் உடனே வந்து விடுகிறது. முக்கியமாக அந்த உச்சக்கட்ட நிலையில் ரத்த அழுத்தமானது அதிகமாக இருக்கும்.

பெண் உச்ச நிலை அடைந்ததை எப்படிக் கண்டு பிடிப்பது?

பெண் குறியின் உள் உதடுகள் இரு மடங்கு தடிப்பாகும். உள் உதடு