Friday 28 November 2014

உச்சக்கட்டத்தில் பெண்கள் – கேள்வி பதில்

By on 16:30
புதுமணத் தம்பதிகளுக்குத் தேனிலவு தரும் பரிசு…!
திருமணமான புதிதில், சில பெண்களுக்கு பயிற்று வலி ஏற்பட்டு, சிறுநீர் கழிக்கும் போது கடுமையான எரிச்சல் தோன்றுவதுண்டு இந்த அறிகுறிகள் இவ்வாறு புதுமணப் பெண்களுக்கு தோன்றுவதற்குக் காரணம், அவர்களின் சிறுநீர் வெளியாகும் உறுப்புக்களில் கிருமித் தொற்று ஏற்படுவதே ஆகும். ஆடவன், தன் இளம் மனைவியோடு உடலுறவு கொள்ளும்போது, தன்னையும் அறியாமலே அவன் வழியாக, அவன் ஆண் குறி வாயிலாக, அவள் சிறுநீர் கழிக்கும் உறுப்புக்களில் கிருமிகள் புகக் காரணம் ஆகிவிடுகின்றhன். பெண்ணின் பெண் குறிக்குக் கொஞ்சம் மேலேதான், அவள் தன் சிறுநீரை வெளியாக்கும் முத்திரக் குழாய் என்னும் யூரீத்தாவின் துவாரம் அமைந்துள்ளது என்பதனை நாம் இங்கு நினைவு கூரவேண்டும்.

இவ்வாறு திருமணமான புதிதில் பெண்டிருக்கு ஏற்படும் இந்தக் கிருமித் தொற்றினை தேனிலவு சிறுநீர்க் கிருமித் தொற்று என்று நயமாக மருத்துவர்கள் கூறுவர். ஆங்கிலத்தில் இதனை ஹனிமூன் பைலோ நெஃப்ரைட்டிஸ் என்பர் திருமணமான உடனேயே புதுமணத் தம்பதிகள் தேனிலவு செல்வர் தேனிலவு செல்லும் காலத்தில்தானே இத்தகு கிருமித் தொற்று ஏற்படுகின்றது? ஆகவே இந்தப் பெயர் எத்தனைப் பொருத்தமாக அமைந்துள்ளன?

உச்சக்கட்டத்தில் பெண்கள் என்ன உணர்கிறார்கள்…?

செக்ஸ் உறவின் போது ஏற்படும் உச்சக்கட்ட இன்பத்தைப் பல்வேறு பெண்கள் அவரவர்களுக்குத் தோன்றிய விதத்தை கூறுவது ஆச்சரியான விஷயம். அந்த நேரத்தில் அந்தரங்கத்தில் தொங்குவது போல உணர்கிறேன் என்று சில பெண்களும், தீவிரமான ஒரு பரவச நிலையை அடைவதாகச் சிலரும், இந்தப் பரவச நிலை மன்மதபீடத்தில் தொடங்கி உடல் முழுவதும் பரவுகிறதாக ஒரு சிலரும், பால் உறுப்புக்களில் ஒரு வித வெப்பம் தோன்றி மறைவதாக ஒரு சிலரும், மின்னல் உடல் முழுவதும் தோன்றி வியாபிக்கிற கட்டம் அது… எனவும் பெண்கள் உச்சக்கட்டத்தை வேறு வேறாகக் கூறுகின்றனர்.

ஆனால் ஆண்களைப் போல பெண்கள் உச்சக்கட்டம் அடைந்ததும் விந்தைப் பீய்ச்சுவதில்லை. மாறாக அவர்களது குறியில் மதன நீர் என்னும் ஒரு வகை பசை போன்ற நீர் சுரக்கிறது. இதைத்தான் சில பெண்கள் தமக்கும் விந்து சுரக்கிறது எனத் தவறாக எண்ணிக் கொள்கின்றனர்.

பெண்களைப் போலன்றி, ஆண்களின் உச்சக்கட்டம் இரண்டு பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதியில் விந்தணுக்களைக் கொண்டு செல்லும் குழாய்கள்- புரோஸ்டேட் விந்துக்குழாய்கள் ஆகியவற்றில் தொடர்ச்சியான இறுக்கங்கள் தோன்றி விந்து சிறுநீர்க்குழாயில் செலுத்தப்படுகிறது. அப்போது தான் ஆண் இனி விந்து வெளியேறி விடும் என்ற தீவிரத்தை அனுபவிக்கிறான். இனியும் தன்னால் விந்து வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த முடியாது என உணர்கிறான்.

உச்சக்கட்டம் எதைப்பொறுத்தது…?

இன்ப எழுச்சி நிலையில் உணர்வுகளைத் தூண்டுதல்கள் மேலும் மேலும் தீவிரமகும் போது இதுவரையில் சேர்த்து வைத்துக் கொண்டிருந்த பாலுணர்வு இறுக்கத்தை உடல் இனியும் வைத்துக்கொள்ள இயலாமல் திடீரென்று உத்வேகத்துடன் வெளியே தள்ளுகிறது. இந்த நிலையையே உச்ச நிலை என்கிறோம். ஆங்கிலத்தில் இதனை க்ளைமாக்ஸ் அல்லது கமிங் என்கின்றனர். இந்த நிலை நீடிக்காது. மிக மிகக் குறுகிய நிலை.

இந்த நிலையில் சில நொடிகளில் தாளகதியில் தசைச்சுருக்கங்கள் தோன்றி மிகத் தீவிரமான உணர்வலைகள் உணரப்படுகின்றன. உடனே நெகிழ் நிலை ஏற்படுகிறது. உடற்கூறு அடிப்படையில் உச்சக்கட்டம் என்பது பேரின்பம் அல்லது மெய்மறந்த நிலை அல்லது ஆனந்த அனுபவம் என்று பல வகையாகக் கூறப்படுகிறது.


உச்சக்கட்டம் ஆணுக்கு-ஆண் ஒரே ஆணுக்கு, உறவுக்கு உறவு மாறுபடும். சில சமயம் உணர்வலைகள் ஒருங்கே கூடி ஒரு பெரிய வெடிப்புடன் உச்சக்கட்டம் நேரலாம். சில உச்சக்கட்டங்கள் மிக மிக மென்மையாக உணரப்படலாம். உச்சக்கட்டம் என்பது தீவிரம் அல்லது தீவிரமின்மை என்பது உறவு கொள்ளும் நபர், நேரம், எதிர்பார்ப்பு, சூழ்நிலை, மனநிலை, ஆகியவற்றைப் பொறுத்துத்தான் அமையும். எனவே இதில் இத்தனை மாறுபாடுகள் உள்ளன.

உச்சக்கட்டத்தில் ஆண் என்ன உணர்கிறான்…?

விதைகள் முற்றிலும் மேலே ஏறி குறியின் அடிப்பகுதியை நெருங்குவது போல இருந்தால் உச்சக்கட்டம் வெகு சீக்கிரத்தில் வந்து விடும் என்று அர்த்தம். ஆனால் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் இவ்வாறு விதை மேலே எழும்புவது குறைவு. இதற்குக் காரணம் விந்து வெளியேறும் நிலையின் இறுக்கம் குறைந்து வருகிறது என்று பொருள்.

உச்சக்கட்டம் நெருங்கும் நேரம் சிலருக்கு விந்து நீர் பனித்துளி போல குறியின் முனைப்பகுதியில் வந்து நிற்கும். இந்தத் திரவத்திலும் ஏராளமான விந்தணுக்கள் இருக்கலாம். இந்த நிலையில் ரத்த அழுத்தம் காரணமாக புரோஸ்டேட் சுரப்பியிலும் சில ஆண்கள் நன்றhக வெப்பத்தையும், ஒரு வித இறுக்கத்தையும் உணர்கின்றனர்.

இதே போல புட்டம் மற்றும் தொடைப்பகுதியிலும் இது போன்று உணர்வார்கள். சில சமயம் இதயத்துடிப்பு அதிகமாக உணரப்படும். அப்போது மூச்சு விடுதலில் ஒரு விதக் கடின நிலை உண்டாகி உச்சக்கட்டம் உடனே வந்து விடுகிறது. முக்கியமாக அந்த உச்சக்கட்ட நிலையில் ரத்த அழுத்தமானது அதிகமாக இருக்கும்.


பெண் உச்ச நிலை அடைந்ததை எப்படிக் கண்டு பிடிப்பது?

பெண் குறியின் உள் உதடுகள் இரு மடங்கு தடிப்பாகும். உள் உதடு

நான் 13-14 வயதிலிருந்தே சுய இன்பத்தை அனுபவிக்கத் தொடங்கிவிட்டேன்..!

By on 16:17
கேள்வி: இந்தக் கேள்வியை கேட்க ரொம்ப கூச்சமாக இருக்கிறது. இருந்தாலும் கேட்கின்றேன். எனக்கு வயது 32 . நான் 13-14 வயதிலிருந்தே சுய இன்பத்தை அனுபவிக்கத் தொடங்கிவிட்டேன். அது நாள் இருந்து இன்று வரை நான் இதற்கு அடிமையாகிவிட்டேன். கடந்த சில வருடங்களாக ஒரு நாளைக்கு 3-5 முறை சுய இன்பம் அனுபவிப்பேன்.

அது மட்டுமல்லாமல் கடந்த 8 – 10 வருடங்களாக பாலியல் படத்திற்கு அடிமையாக இருந்தேன். ஒரு நாளும் பார்க்காமல் இருந்தது கிடையாது. முக்கியமாக இணையத்தளங்களில். அதைப் பார்த்து விட்டு பலமுறை சுய இன்பம் அனுபவிப்பேன்.

ஆனால் கடந்த பல மாதங்களாக எனக்கு இந்த சுய இன்பம் அனுபவிப்பதிலிருந்த ஈடுபாடு குறைவடைகிறது. தற்பொழுது ஒரு வாரத்திற்கு ஒரு முறை என்ற அளவில் வந்து விட்டது.

அத்துடன் அப்படி சுய இன்பத்தில் வெளியேறும் விந்துதிரவத்தின் அளவும் நன்றாகக் குறைந்து விட்டது. அத்துடன் இந்த பாலியல் படங்களைப் பார்க்கின்ற ஈடுபாடும் குறைந்து போய்விட்டது. அப்படி மீறி எப்போதாவது பார்த்தாலும் எனது ஆண்குறி முந்தய மாதிரி தடிப்பதில்லை. அந்தப் படங்களைப் பார்க்கும்போது எந்த உணர்வுகளும் பெரிதாக வருவதில்லை.

பெண்களைக் கண்டால் பெரிதாக எந்த உணர்ச்சிகளும் தற்போது வருவதில்லை. இத்தனைக்கும் நான் 32 வயது நிரம்பிய குடி, புகைப்பழக்கமற்ற மணமாகாத ஆண்.

இதுவரை எனக்கு எந்த வியாதிகளும் வந்ததில்லை. மன அழுத்தம் எதுவும் இல்லை.

தற்பொழுது காலை நேரத்தில் ஏற்படும் விறைப்பும் இல்லை என்றே சொல்லாலம்.

நானாக சுய இன்பம் அனுபவித்தால் தாமதமாக விறைப்பு ஏற்படுகின்றது. அது விந்து வெளியேறியவுடனேயே விறைப்பு குறைந்து விடுகின்றது.

விரைவில் திருமணமாக இருக்கும் நான் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கின்றேன். யாராவது பாலியல் பற்றிக் பேசினாலோ, என்னைத் தூண்டினாலோ அதில் எனக்கு எந்த ஈடுபாடும் இல்லாமல் இருக்கின்றது.

இதற்கு நான் என்ன செய்யவேண்டும்?. எவ்வாறு நான் எனது பழைய நிலையை அடைவது. எவ்வாறு நான் சந்தோசமாக வாழ்வது?.

இதற்கு முன்னர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் எனது ஆணுறுப்பில் உணர்வு தூண்டல் இருந்து கொண்டே இருக்கும். தற்பொழுது எதுவுமே இல்லை. மேலும் நான் எந்தவிதமான மன அழுத்தத்திற்கும் உள்ளாகவில்லை. மிகவும் தெளிவாகவும் சந்தோசமுமாகவே எனது வாழ்க்கை உள்ளது. ஆனால் கடந்த ஒரு வருடமாக இந்த பாலியல் உணர்வு குறைந்து கொண்டு செல்வது கவலையளிக்கிறது.


இதற்கு என்ன காரணமாக இருக்கும்? தொடர்ந்து சுய இன்பம் அனுபவித்ததா? தொடர்ந்து போர்னோகிராபி படம் பார்த்ததா? அல்லது வேறென்ன காரணம்?

நான் புதிதாக ஆரம்பிக்க இருக்கும் எனது மண வாழ்வில் எவ்வாறான தாக்கத்தை உண்டுபண்னும்? இதிலிருந்து மீண்டு எனது பழைய நிலையை அடையமுடியுமா?

தயவு செய்து எனது பழைய நிலையை அடைந்து சந்தோசமாக எனது திருமண வாழ்வை தொடங்குவதற்கு வழிகாட்டுங்கள் மருத்துவர் அவர்களே.

பதில்: மிகப்பெரிய கேள்வி கேட்டுள்ளீர்கள், உங்களின் சந்தேகங்களை போக்கும் வகையில் நானும் எனது பதிலை கட்டுரையாகவே தருகிறேன்
சுய இன்பம் (MASTURBATION) சில தகவல்கள்.

ü சுய இன்பம் (MASTUBATION) தனியாகவே பாலியல் இன்பம் பெறுதலைக் குறிக்கும்.

ü நம்மில் பல பேர் சுய இன்பம் என்றாலே ஒரு குற்றச்செயல் போலதான் கருத்துக்களைச் சொல்வார்கள்.

ü ஒரு ஆய்வில் 95 வீதமான ஆண்களும் 85 வீதமான பெண்களும் சுய இன்பம் பெறுவதை ஒத்துக் கொள்கிறார்கள்.

ü ஒத்துக் கொள்ளாதவர்களிலும் சுய இன்பம் பெறுபவர்கள் எத்தனையோ?
ü திருமணமானவர்கள் கூட இடையிடையே சுய இன்பத்தில் ஈடுபடுவதையும் அந்த ஆய்வு வெளிக்கொணர்ந்தது.

ü சுய இன்பம் என்பது இருபாலரிலும் காணப்படும் பொதுவான ஒரு இயல்பு.

ü ஆரம்ப காலத்தில் இந்த சுய இன்பம் என்பது பாலியல் வேறுபாட்டு குறையாகவே மருத்துவத்தாலும் பார்க்கப்பட்டது இருந்தாலும் இது தீங்கற்ற ஒரு சாதாரன செயலாகவே இப்போது நோக்கப் படுகிறது.

ü எப்போதாவது செய்யும் (தோராயமாக மாதத்திற்கு 2 – 3 முறை) சுய இன்பம் காரணமாக உடல் ரீதியாக எந்தத் தீங்கும் இல்லை.

ü இருந்தாலும் இது மன ரீதியாக சில பாதிப்புக்களை ஏற்படுத்தலாம் . குறிப்பாக சுய இன்பத்தில் அதிகம் நாட்டம் கொண்டு இல்லற இன்பத்தை தவிர்க்கும் போது குடும்பச் சிக்கல்கள் ஏற்படலாம்.


ü சுய இன்பம் எந்தவொரு பாதிப்பையும் ஒருவருக்கு ஏற்படுத்தும் என்பதில் எந்த உண்மையும் இல்லை. ஆனால் அதிகப்படியான சுய இன்பத்தால் கை, கால் சோர்வு, ஆண் உறுப்பு தளர்ந்து போகுதல், நினைவாற்றல் குறைபாடு, கை, கால் நடுக்கம், உடலுறவில் நாட்டமின்மை போன்றவற்றால் பாதிப்படைகின்றனர்.

ü குறிப்பாக எப்போதாவது செய்யும் சுய இன்பம் பெறுவதால் ஆண்மைத் தன்மை குறையும் என்பதில் எந்த உண்மையும் இல்லை. ஆனால் அதிகப்படியான சுய இன்பம் தேவையற்ற உடல் பாதிப்பையும் மன நல மாற்றத்தையும் உண்டாக்கலாம்.

ü சுய இன்பத்தால் குழந்தை பிறப்பதிலும் எந்தச் சிக்கலும் ஏற்படாது.
ü ஒருவர் சுய இன்பத்தில் ஈடுபடும் போது வெளிவரும் விந்திலும் உடலுறவில் வெளிவரும் விந்திலும், விந்தனுக்களின் எண்ணிக்கையில் வித்தியாசம் உண்டு.

சுய இன்பத்தில் ஈடுபடாவிட்டாலும் விந்து தானாகவே வெளியேறிவிடும். இதனால் எப்போதாவது செய்யும் சுய இன்பத்தால் ஒருவரின் ஆண்மை குறைகிறது என்பதில் எந்த உண்மையும் இல்லை

முக்கியமாக கவனிக்க
பொதுவாக சுய இன்பத்தால் எந்த ஒரு பாதிப்பு ஏற்படாது என்று கூறினாலும் நிறைய இளைஞர்கள் மற்றும் வளரிளம் பருவத்தினர் அளவிற்கு அதிகமான சுய இன்பத்தில் ஈடுபட்டு
ü மனத்தளர்ச்சி மற்றும் உடல் சோர்வு, அசதி,
ü மற்றவர்களை நேருக்கு நேர் பார்த்து பேச தயக்கம்,
ü பெண்களிடம் பேசும்போதே அல்லது அவர்களை பார்க்கும் போதோ கண்கள் தன்னையும் அறியாமல் பெண்களின் மார்பகத்தை பார்ப்பது, இடுப்பை பார்ப்பது போன்ற செயல்கள். இதனால் அலுவலகத்திலோ பொது இடங்களிளோ கெட்டபெயர் ஏற்படுத்திக்கொள்வது.
ü ஒரு நாளைக்கு ஒன்றுக்கும் மேற்பட்டு சுய இன்பத்தில் ஈடுபடுவது, இதனால் வெளியில் செல்ல தயக்கம்,
ü வேலையில் ஈடுபாடின்மை,
ü திருமணம் செய்ய தயக்கம்.
ü திருமணப்பேச்சை எடுத்தாலே பயம்.
ü உடலுறவில் ஈடுபட பயம்.
ü மனைவியோ கேர்ள் பிரண்டோ தப்பாக நினைப்பாள் என்ற பயம்.
ü அழகான பெண்களை பார்த்தவுடன் சுய இன்பம் செய்ய தோன்றுவது.
ü சுய இன்பம் செய்யாவிட்டால் தூக்கம் வராமல் இருப்பது
போன்ற அறிகுறிகள் இருந்தால் உடன் உளவியல் ஆலோசகர் & சிறப்பு மருத்துவரை அனுகி தயங்காமல் ஆலோசனை பெறவும்

எனவே அதிகப்படியான சுய இன்பத்தால்
Ø கை,கால் நடுக்கம்,
Ø அசதி,
Ø சோர்வு,
Ø மனத்தளர்ச்சி,
Ø விந்து முந்துதல்,
Ø ஆணுறுப்பு எழுச்சி குறைபாடு,
Ø உடலுறவில் நாட்டமின்மை,
Ø துனைவியை திருப்தி படுத்த முடியாமை,
Ø நினைவாற்றல் குறைபாடு,
Ø எதிலும் கவனமின்மை,
Ø படபடப்பு,
Ø மற்றவர்களை நேருக்கு நேர் பார்க்க முடியாமை,
Ø திருமணத்திற்கு தயக்கம்,
Ø உறுப்பு சிறுத்தல்,
Ø ஆணுறுப்பில் வலி

போன்ற உடல் மற்றும் உளவியல் பிரச்சினைகளால் பாதிக்கப்படுவோமோ என்ற அச்சத்தை தவிர்த்து, மேற்கண்ட பிரச்சினைகளால் பாதித்திருந்தால் தயங்காமல் உடனடியாக மருத்துவரை சந்தித்து தகுந்த சிகிச்சை பெற்று பிரச்சினையிலிருந்து விடுபடுங்கள்.