Sunday 16 November 2014

மாணவிகளிடம் தங்கள் ஆசையை தணித்துக் கொண்டு விபசார கும்பலிடம் விற்பனை செய்த…

By on 01:36
திருவனந்தபுரம் அருகே காத்தங்கோடைச் சேர்ந்த ஒரு பள்ளி மாணவி திடீரென்று மாயமானார். இதனால் பதறிப்போன அவரது பெற்றோர் அந்த மாணவியை தேடினர். அப்போது அவர் அந்த பகுதியைச் சேர்ந்த முபசீர் என்ற ஆட்டோ டிரைவரின் ஆட்டோவில் ஏறிச்சென்றதை பார்த்ததாக சிலர் தகவல் தெரிவித்தனர்.

இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் வீட்டில் இருந்த அந்த மாணவியின் செல்போனில் கடைசியாக பேசிய நம்பருக்கு தொடர்பு கொண்டனர். எதிர்முனையில் பேசியவர் சரியாக பதில் கூறாமல் தொலைபேசி இணைப்பை துண்டித்து விட்டார்.

இதுபற்றி காத்தங்கோடு பொலிஸில் புகார் செய்யப்பட்டது. மாணவியின் செல்போனும் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் விசாரணையை தொடங்கினார்கள். அப்போது மாணவி கடத்தலின் பின்னணியில் ஒரு கும்பல் செயல்பட்டது தெரிய வந்தது. போலீசார் தீவிர விசாரணை நடத்தி அந்த பகுதியில் அறை எடுத்து தங்கி இருந்த ஆட்டோ டிரைவர்கள் முபசீர், அனிஸ், அமல்தேவ் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

அந்த அறையில் மாயமான மாணவி உள்பட 2 மாணவிகள் பள்ளி சீருடையுடன் அடைக்கப்பட்டிருந்தனர். அந்த மாணவிகளை மீட்டு பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். ஆட்டோ டிரைவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. 3ஆட்டோ டிரைவர்களும் அப்பாவி மாணவிகளிடம் நைசாக பழகி காதலிப்பது போல நடிப்பார்கள். அந்த மாணவிகளிடம் தங்கள் ஆசையை தணித்துக் கொண்ட பிறகு விபசார கும்பலிடம் விற்று விடுவார்கள் என்பது தெரிய வந்தது.

இந்த கும்பலிடம் சிக்கி சீரழிந்து விபசார கும்பலிடம் விற்கப்பட்ட மற்ற பள்ளி மாணவிகளை பற்றி விசாரித்து அவர்களை மீட்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.

0 comments:

Post a Comment