Wednesday 12 November 2014

உறவில் உச்சகட்டம் எதற்காக..?தெரியுமா உங்களுக்கு…!

By on 15:39
உடலுக்குள் ஒளிந்திருக்கும் இன்பத்தை அனுபவிக்க மட்டுமல்ல, மனித விடுதலைக்கும், தம்பதியர் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வதற்கும் உச்சகட்டம் வழிவகுக்கிறது. உச்சகட்டத்தை அடைந்த தம்பதியினர் எவரும் விவகாரத்திற்காக நீதிமன்றங்களை நாடுவதில்லை என்பதிலேயே நாம் இதனை நன்கு புரிந்து கொள்ளலாம்.
அதனால் சிற்றின்பம் என்ற காமத்தில், காதல் என்பதை கலந்து பேரின்பம் என்ற உச்சகட்டத்தை அடைவதே ஒவ்வொரு மனிதனின் வாழ்விற்கும் இன்பம் தரக்கூடியது ஆகும்.
உச்சகட்டத்தை பார்க்காத ஆண் மற்றும் பெண்ணை வாழ்வில் முழுமை பெற்றவர்களாக கருதவே முடியாது என்பதற்கு கீழ்காணும் சம்பவமே ஒரு எடுத்துக்காட்டு.
பன்னாட்டு நிறுவனத்தில் உயர்பதவி வகிக்கும் ஒரு பெண், அலுவலகத்தில் மிகச் சிறப்பாக பணி புரிந்து நற்பெயரை பெற்றார். ஆனால் வீட்டுக்கு வந்ததும் சிடுசிடுவென பேசுவதும், குழந்தைகளை அடிப்பதும், மற்றவர்களிடம் எரிச்சலை காட்டுவதும், கோபப்படுவது மேலும் எல்லா வேலைகளையும் இழுத்து போட்டுக் கொண்டு செயல்படுவது என்று தன்னைத்தானே துன்புறுத்திக் கொண்டார்.
நிலைமை தலைக்கு மேல் செல்லவே, வேறு வழியின்றி மருத்துவரிடம் சென்றார்.
அவரை ஆய்வு செய்த மருத்துவர் உடல்நலம், மனநலம் போன்றவை நன்றாக இருந்தாலும் அவருக்கு பாலியல் வெளிப்பாடு ஒடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. ஆம், அவர் ஆசைப்பட்டப்படி எல்லாம் அவரால் கணவருடன் உறவில் இன்பத்தை அனுபவிக்க முடியவில்லை.
அடக்கப்பட்ட பாலுந்த ஆற்றல் அதாவது Libidonal Energy காரணமாகவே சிக்கல் ஏற்பட்டு அப்பெண் அசாதரணமாக நடந்து கொண்டது கண்டறியப்பட்டது.
அந்த பெண் அதிகாரி படித்தவராக இருந்தாலும், கலவியில்   உச்சகட்டம் என்ற ஒன்று உண்டு என்று தெரிந்தாலும், அதை எப்படி பெறுவது என்று தெரியாமல் அத்தனை ஆசைகளையும் மனதில் பூட்டி வைத்த காரணத்தாலேயே இந்த நிலைக்கு ஆளாகியுள்ளார்.
அவர் மட்டுமல்ல, நம் இந்திய பெண்களில் சுமார் 80 சதவீதத்திற்கு மேற்பட்ட பெண்கள், உச்சகட்டம் என்றால் என்னவென்றே தெரியாமல், கலவி இன்பம் அனுபவிக்கிறார்கள் என்பது தான் கொடுமை.
இனியும் தொடரலாமா இந்த நிலைமை சிந்தியுங்கள் தம்பதியரே… சிந்தித்து செயல்படுங்கள்… ஆற்றல் மிகு உச்சகட்டத்தில் ஆனந்தம் பெறுங்கள்…
துணையை ‘தூக்கி’ விளையாடுங்கள்…
25-03-2013
ht2130
உண்மையிலேயே நமக்குப் பிடிச்ச பெண்ணைத் தூக்கிப் பார்த்து ரசிப்பது எவ்வளவு சந்தோஷமான விஷயம் தெரியுமா..!
சினிமாக்களில் மட்டும்தான் ஹீரோக்கள் ஹீரோயின்களை தூக்கி விளையாடனுமா, என்ன.. நிஜத்திலும் கணவர்களும், காதலர்களும்தான் ஹீரோக்கள்.. மனைவியரும், காதலியரும்தான் ஹீரோயின்கள். எனவே இவர்களும் கூட இப்படித் தூக்கி தூக்கி விளையாடலாம்.
தப்பே இல்லை காதலிலும், காமத்திலும் அன்னியோன்யத்திற்கு நிறைய முக்கியத்துவம் உண்டு. உடல் ஸ்பரிசமும், உள்ளக் கிளர்ச்சியும் இங்கு கொளுந்து விட்டு எரியும்போது உடலும், உள்ளமும் ஒரு சேர சந்தோஷப்படும்.
செக்ஸ் உறவின்போதும், ஜாலியான மன நிலையில் இருக்கும்போதும் பெண்களை ஆண்கள் தூக்குவது என்பது ரொம்ப வித்தியாசமானதாக இருக்கும். மற்ற நேரத்தி்ல் மனைவி அல்லது காதலியைத் தூக்க சிரமப்படும் ஆட்கள் கூட அந்த சமயத்தில் ஒரே தூக்காக தூக்கி விடுவார்கள்.
அப்போது அந்தப் பெண்கள் படும் சந்தோஷம் இருக்கே.. சொல்லி மாள முடியாது. தூக்குவதில் என்ன சந்தோஷம் இருக்கிறது என்பது தெரியவில்லை.
இதுகுறித்து விஞ்ஞானப்பூர்வமாகவும் எதுவும் கூறப்பட்டதாக தெரியவில்லை. பெரும்பாலும் செக்ஸ் உறவு சமயத்தில்தான் இப்படி தூக்கி விளையாடுவதை அதிகம் செய்கிறார்கள் ஆண்கள்.
இப்படி செய்வதால் அந்தப் பெண்களுக்கு, தங்களது துணைவர்கள் மீது நிறைய மதிப்பும், ஆசையும் பெருகுகிறதாம். நம்மாளு நல்லா ஸ்டிராங்காதன் இருக்காரு என்று அவர்களுக்கு பெருமையாகவும் இருக்குமாம்.
இதனால்தான் தங்களைத் தூக்கும் கணவர் அல்லது காதலரை பெண்கள் ரசிக்கிறார்களாம். இப்படித் தூக்கி விளையாடுவது ஆண்களின் உரிமை இல்லை, பெண்களும் கூட இதைச் செய்யலாம். சரி தூக்குவது என்று முடிவான பின்னர் அதை எப்படிச் செய்யலாம் இதிலும் கலை நயத்தைப் புகுத்துங்களேன்..
உங்களால் எளிதில் தூக்க முடியும் என்று தோன்றினால் ஏதாவது சின்னதாக ஒரு ரொமான்ஸ் கவிதையை சொல்லியபடியே தூக்குங்குள். அப்படியே ரூமுக்குள் அல்லது வீட்டுக்குள் சின்னதாக ஒரு வலம் வாருங்கள்.
தூக்கிய நிலையி்ல் உதடுகளில் அழகாக ஒரு முத்தம் வையுங்கள், கண்களில் அழகாக முத்தமிடுங்கள், காதுகளில் சின்னதாக கிஸ் பண்ணுங்கள். சங்குக் கழுத்தில் சிக்கென்று ஒன்று வைத்து சிலிர்ப்ப்பூட்டுங்கள்.
கையில் தூக்கியிருக்கும்போது இடுப்பில் சின்னதாக விளையாட்டுக் காட்டுங்கள். மீன் போல அவர் துள்ளிக் குதிக்கும்போது மார்போடு கட்டி அணைத்து தாலாட்டுங்கள்.
தூக்கிய நிலையிலேயே அப்படியே ஏதாவது ஒரு டேபிளில் மெல்ல படுக்க வைத்து நீங்கள் அவர் மீது சாய்ந்து அப்படியே உள் வாங்கிக் கொண்டு உற்சாகமூட்டுங்கள்  முத்த மழையால். பிறகு முக்கியமான விஷயம், முடிந்தவரை நல்ல திடமாக பாலன்ஸ் செய்து கொண்டு துணையை தூக்குவது நல்லது.

0 comments:

Post a Comment